பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டால் 'சென்செக்ஸ்' 184 புள்ளிகள் அதிகரிப்புபரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டால் 'சென்செக்ஸ்' 184 புள்ளிகள் ... ... மும்பை குண்டவெடிப்பால் பங்குச்சந்தையில் சரிவு மும்பை குண்டவெடிப்பால் பங்குச்சந்தையில் சரிவு ...
கொள்முதல் விலையை உயர்த்துகிறது தனியார் பால் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2011
09:12

சேலம் : தனியார் பால் நிறுவனம், பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 1.25 ரூபாய் உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால், ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பலர், தனியாரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால், ஆவின் ஒன்றியங்கள் இழுத்து மூடப்படும் சூழல் உருவாகும். தமிழகம் முழுவதும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள, 8,600 பிரதம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம், ஆவின் ஒன்றியங்களுக்கு பால் எடுத்து செல்லப்பட்டு, பாக்கெட்டாகவும், பால் பொருட்களாகவும் தயார் செய்து விற்பனைக்கு வருகிறது. ஆரம்பத்தில், ஆவின் பாலுக்கு இருந்த கிராக்கி தற்போது குறைந்து விட்டது. தனியார் பால் நிறுவனங்கள் பல, தமிழகத்தில் காலூன்றி உள்ளன. ஆவினை விட தனியார் பால் குறைந்த விலையில் கிடைப்பதால், ஏழை, எளிய மக்கள் அவற்றை அதிகம் விரும்புகின்றனர். 'ஹட்சன்' எனும் தனியார் பால் நிறுவனம், உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 1.25 ரூபாய் வரை உயர்த்தி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயிகளிடையே தகவல் பரவியுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில், ஆவினை விட தனியார் பால் விற்பனை தான் அதிகம் உள்ளது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்டால், ஆவினுக்கு வரும் பால் வரத்து கிடுகிடுவென சரிவடைந்துவிடும். இதனால், ஆவின் ஒன்றியங்களை நம்பியுள்ள உற்பத்தியாளர்களும், நுகர்வோர்களும் பாதிப்படைவர். தமிழக அரசுக்கும், அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது: ஆவினில், இதரச்சத்து, 8.2 சதவீதம், கொழுப்புச் சத்து, 4.3 சதவீதம் கொண்ட ஒரு லிட்டர் பசும்பால் லிட்டருக்கு, 18 ரூபாய் வரையிலும், 8.7 சதவீத இதரச்சத்து, 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட எருமைப்பாலை, 26 ரூபாயிலும் விற்கின்றனர். தனியார் பால் நிறுவனங்கள், ஒரு லிட்டர் பாலை, 30 ரூபாய்க்கு மேல் விற்கின்றனர். 7.5 சதவீத இதரச்சத்துக்கள் இருந்தாலும், அதற்குரிய கொள்முதல் விலையை கொடுக்கின்றனர். ஆனால், ஆவினில், 7.5 சதவீதத்துக்கு குறைவாக சத்துக்கள் இருந்தால், அந்த பாலை பறிமுதல் செய்கின்றனர். தனியார் நிறுவனங்கள் பால் வினியோகத்தை முறைப்படுத்துகின்றனர். உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கொடுக்கின்றனர். நெய், வெண்ணெய் போன்றவற்றை கிலோ, 330 ரூபாய்க்கு தனியார் நிறுவனம் விற்கிறது. ஆவின், 240 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஆவின் ஒன்றியங்கள் அனைத்தும் நஷ்டத்துக்குள்ளாகும். காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான அந்த தனியார் பால் நிறுவனம் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வந்துள்ளது. தனியாருக்கு நிகராக, ஆவினும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசிடம், இதை தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)