பதிவு செய்த நாள்
16 ஜூலை2011
00:03
கொச்சி: சவுத் இந்தியன் பேங்க், நடப்பு நிதியாண்டில், முதல் காலாண்டில் (ஏப்.-ஜூன்), 82.49 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த 2010ம் நிதியாண்டின், இதே காலாண்டை விட, 41.15 சதவீதம் (58.44 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், வங்கியின் மொத்த வருவாய், 41.01 சதவீதம் வளர்ச்சி கண்டு, 581.78 கோடி ரூபாயிலிருந்து, 820.34 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கியின் மொத்த வணிகம், 33.71 சதவீதம் அதிகரித்து, 40 ஆயிரத்து 217 கோடி ரூபாயிலிருந்து, 53 ஆயிரத்து 773 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதில், டிபாசிட் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 31 ஆயிரத்து 662 கோடி ரூபாயாகவும், வங்கி வழங்கிய கடன்கள் 22 ஆயிரத்து 151 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வாயிலான பரிவர்த்தனை 16.02 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,852 கோடி ரூபாயிலிருந்து, 6,789 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|