பதிவு செய்த நாள்
16 ஜூலை2011
00:05
புதுடில்லி: தென்னிந்தியாவின் தேயிலை ஏற்றுமதி, சென்ற மே மாதத்தில், 14 சதவீதம் சரிவடைந்து, 64.30 லட்சம் கிலோவாக உள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 74.70 லட்சம் கிலோவாக அதிகரித்து காணப்பட்டது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.கிழக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த கென்யா உள்ளிட்ட நாடுகள், எகிப்து நாட்டிற்கு தேயிலையை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்நிலையில், எகிப்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், தேயிலை ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் மற்ற நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியை அதிகரித்துள்ளன. இது, தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலைக்கு கடும்போட்டியை ஏற்படுத்தியுள்ளது என, தென்னிந்திய பெருந்தோட்டப் பயிர் சாகுபடியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சஞ்சித் தெரிவித்தார்.சென்ற மே மாதத்தில், தென்னிந்தியாவின் தேயிலை உற்பத்தி 3 சதவீதம் குறைந்து, 2.44 கோடி கிலோவாக உள்ளது. இந்த உற்பத்தி, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 2.52 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|