ஜப்பானில் தேவை அதிகரிப்பால் இந்தியாவின் இறால், மீன் ஏற்றுமதி சூடுபிடித்ததுஜப்பானில் தேவை அதிகரிப்பால் இந்தியாவின் இறால், மீன் ஏற்றுமதி ... ... சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை ...
அரசு துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் காலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
09:08

ராமநாதபுரம் : ''தமிழகத்தில் ஐந்து லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், திட்டப்பணிகளைச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி கூறினார். ராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்க கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில், வரும் 30ம் தேதி கருத்தரங்கு நடக்கிறது. முதல்வர் ஜெ., 'அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்று, நிவர்த்தி செய்யப்படும்' என, தேர்தலின்போது கூறினார். அதன்படி, முதல்வர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து நியாயமான தீர்வு காண்பார், என்ற நம்பிக்கையில் உள்ளோம். அரசுத் துறைகளில் இரண்டு லட்சம்; சத்துணவு, அங்கன்வாடி அமைப்பாளர், மக்கள் நலப் பணியாளர் போன்ற மற்ற பிரிவுகளில் மூன்று லட்சம் என ஐந்து லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமைச் செயலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளதால், கீழ்மட்ட ஆட்களின்றி அதிகாரிகள் செயல்பட முடியவில்லை. காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பினால்தான், அரசின் திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக இருக்கும். வாரிசுதாரர்கள் பணியிடம் நிரப்புவதிலும் சுணக்கம் காணப்படுகிறது. மருத்துவத் துறையில் 1993லிருந்தும், வேளாண் துறையில் 1996லிருந்தும், கல்வித் துறையில் 2004லிருந்தும் வாரிசுதாரர்கள் பணிக்காகக் காத்திருக்கின்றனர். பல துறைகளில் பணிவரன்முறை செய்யப்படாமல், ஆரம்ப கட்ட ஊதியத்திலேயே ஊழியர்கள் பணியாற்றி, சிலர் இறந்தும், பலர் ஓய்வும் பெற்று விட்டனர். அரசு ஊழியர்களுக்கான பயிற்சி நிலையம் மண்டலம்வாரியாக அமைக்க வேண்டும். ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம், என்றார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உடனிருந்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)