பதிவு செய்த நாள்
25 ஜூலை2011
10:12
குன்னூர் : வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்த நிலையால், குன்னூரில், 2.65 கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை தூள் தேக்கம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் ஏல மையம் மூலம், வாரந்தோறும் விற்கப்படுகிறது. இந்த வாரம், 16.71 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இலை ரகம், 11.33 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம், 5.38 லட்சம் கிலோ அடங்கும். உள்நாடு மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்தநிலையால், ஏலம் களைகட்டவில்லை. பாகிஸ்தான், ரஷ்ய வர்த்தகர்கள் மட்டும் குறைந்தளவு தேயிலை தூள் வாங்கினர்; ஆப்ரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்கவில்லை. உள்நாட்டு வர்த்தகர்களின் பங்களிப்பும் சுமாராக இருந்ததால், விற்பனைக்கு வந்த தேயிலை தூளில், 2.65 கோடி ரூபாய் மதிப்புள்ள, 28 சதவீத தேயிலை தூள் தேங்கியது. ஏலத்தில் போட்டி இல்லாததால், அனைத்து ரக தூளின் விலையும், கிலோவுக்கு, 3 ரூபாய் விலை குறைந்தது; ஒரு கிலோ தேயிலை தூளின் சராசரி விலை, 57.42 ரூபாயாக இருந்தது. சி.டி.சி., ரக தூளில், அதிகபட்சம், கிலோவுக்கு, 149 ரூபாய் விலை கிடைத்தது. தூளுக்கு, 39-45 ரூபாய், சிறந்த ரக தூளுக்கு, 85-140 ரூபாய் விலை கிடைத்தது. அடுத்த ஏலம், வரும், 28, 29 தேதிகளில் நடத்தப்படவுள்ளது. மொத்தம், 17.60 லட்சம் கிலோ தேயிலை தூள் தற்போது விற்பனைக்கு காத்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|