பதிவு செய்த நாள்
26 ஜூலை2011
10:06
கோழிக்கோடு : 'கோழிக்கோட்டில் இருந்து சென்னைக்கும், திருவனந்தபுரத்திற்கு இன்னும் ஒரு மாதத்தில் தனியார் விமான நிறுவனம் புதிய சேவையை துவக்கும்' என மத்திய விமான போக்குவரத்துத் துறை இயக்குனர் ஜெனரல் பரத்பூஷண் தெரிவித்தார். மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குனர் ஜெனரல் பரத்பூஷண் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், பல்வேறு அமைப்புக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,'கோழிக்கோட்டில் இருந்து சென்னை மற்றும் திருவனந்தபுரத்திற்கும் விமான சேவை துவக்கப்படவேண்டும். ஏற்கனவே, கோழிக்கோட்டில் இருந்து பஹ்ரைன், கத்தார் நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பல வளைகுடா நாடுகளுக்கு விமான சர்வீஸ் துவக்கப்படவேண்டும் என,கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை, கோழிக்கோட்டில் இருந்து சென்னை மற்றும் திருவனந்தபுரத்திற்கு அளிக்க இயலாது. ஆனால், இதுகுறித்து சில தனியார் விமான நிறுவனங்களுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் கோழிக்கோடு - சென்னை, கோழிக்கோடு - திருவனந்தபுரம் இடையே விமான சேவை துவக்கப்படும்' என்றார். இந்நிலையில், ஏர்- இந்தியா நிறுவன நிலைய மேலாளர் கோல்டர் கூறுகையில்,'வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு, தனியார் விமான சேவை துவக்க முடியும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|