பதிவு செய்த நாள்
03 ஆக2011
02:09
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மந்தமாக இருந்தது. சென்ற ஜூலை மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டிருந்தது என்ற செய்தியாலும், பிரதமரின் ஆலோசனை குழு நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக குறைந்திருக்கும் என்ற அறிவிப்பாலும், பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.செவ்வாயன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், ரியல் எஸ் டேட், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. இருப் பினும், எண்ணெய் எரிவாயு, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 204.44 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,109.89 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,283.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,037.87 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென் செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 7 நிறுவனப் பங்கு களின் விலை உயர்ந்தும் இருந்தது. இப்பங்கு சந்தையில், 1,877 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தும், 946 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 142 நிறுவனப் பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 60.25 புள்ளிகள் குறைந்து, 5,456.55 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,496.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,433.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|