பதிவு செய்த நாள்
09 ஆக2011
15:40
புதுடில்லி : ஜூன் மாதத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 4 சதவீதம் சரிவடைந்துள்ளது. தென்னிந்தியாவில் தேயிலை உற்பத்தி சரிவடைந்ததால் ஜூன் மாதத்தில் 12.27 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் 12.76 மில்லியன் கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டதாக இந்திய தேயிலை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே சமயம் வட இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அளவு 14 சதவீதம் அதிகரித்து 5.62 மில்லியன் கிலோவாக உள்ளதாகவும் இந்திய தேயிலை கழகம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அளவு 15 சதவீதம் சரிந்து 6.64 மில்லியன் கிலோவாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் தேயிலை ஏற்றுமதி 5 சதவீதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|