சரிவுடன் முடிந்தது வர்த்தகம்சரிவுடன் முடிந்தது வர்த்தகம் ... வாசன் பல் மருத்துவமனை புதிய கிளை துவக்கம் வாசன் பல் மருத்துவமனை புதிய கிளை துவக்கம் ...
பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை இலக்கை குறைக்க மத்திய அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2011
00:02

மும்பை: நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பனை செய்து 40ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்த இலக்கை குறைக்க பரிசீலனைசெயப்படுகிறது.ஆனால், இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், ஓ.என்.ஜி.சி, செயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் 2வது பங்கு வெளியீட்டை ஒத்தி வைத்து வருகின்றன.பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டும் இரண்டாவது முறையாக பங்கு வெளியீட்டில் இறங்கி 1,144 ‌கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டிக் கொண்டது.இந்நிலையில், அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பு பிரச்சனையாலும், கடன் தகுதி மதிப்பீடு குறைக்கப்பட்டதாலும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இத்தகைய அசாதாரணமான சூழலில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்காது என்று கருதப்படுகிறது. இதையடுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்கை குறைப்பது குறித்து மத்திய அர” பரிசீலித்து வருகிறது. இது குறித்து மத்திய பங்குவிலக்கல் துறை செயலர் முகமது ஹலீம்கான் கூறும்போது,' தற்போதைய சூழலில், பங்கு விற்பனைக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொடருமா அல்லது திருத்தியமைக்கப்படுமா என்பதை கூறுவது கடினம்' என்று தெரிவித்தார்.மத்திய அரசு, சென்ற 2009-10ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 22 ஆயிரத்து 763 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)