பதிவு செய்த நாள்
10 ஆக2011
00:02
மும்பை: நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பனை செய்து 40ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்த இலக்கை குறைக்க பரிசீலனைசெயப்படுகிறது.ஆனால், இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், ஓ.என்.ஜி.சி, செயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் 2வது பங்கு வெளியீட்டை ஒத்தி வைத்து வருகின்றன.பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டும் இரண்டாவது முறையாக பங்கு வெளியீட்டில் இறங்கி 1,144 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டிக் கொண்டது.இந்நிலையில், அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பு பிரச்சனையாலும், கடன் தகுதி மதிப்பீடு குறைக்கப்பட்டதாலும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இத்தகைய அசாதாரணமான சூழலில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு கிடைக்காது என்று கருதப்படுகிறது. இதையடுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்கை குறைப்பது குறித்து மத்திய அர” பரிசீலித்து வருகிறது. இது குறித்து மத்திய பங்குவிலக்கல் துறை செயலர் முகமது ஹலீம்கான் கூறும்போது,' தற்போதைய சூழலில், பங்கு விற்பனைக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொடருமா அல்லது திருத்தியமைக்கப்படுமா என்பதை கூறுவது கடினம்' என்று தெரிவித்தார்.மத்திய அரசு, சென்ற 2009-10ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 22 ஆயிரத்து 763 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|