வீடியோகான் மொபைல் முழு டாக் டைம் சலுகைவீடியோகான் மொபைல் முழு டாக் டைம் சலுகை ... இயற்கை எரிவாயு பயன்பாடு: ரயில்வே - ஐ.ஓ.சி., ஒப்பந்தம் இயற்கை எரிவாயு பயன்பாடு: ரயில்வே - ஐ.ஓ.சி., ஒப்பந்தம் ...
செயில் நிறுவனம் ரூ.72,000 கோடியில் விரிவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
00:23

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் (செயில்), 72 ஆயிரம் கோடி திட்டச் செலவில், விரிவாக்கம் மற்றும் அதன் தொழிற்சாலைகளை, நவீனமயமாக்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது.உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், செயில் நிறுவனத்திற்கு, நாட்டின் பல முக்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது இந்நிறுவனம், ஆண்டுக்கு, 1.40 கோடி டன் உற்பத்தி திறனில் பல்வேறு வகையான உருக்கு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனை, வரும் 2013க்குள், ஆண்டுக்கு, 2.40 கோடி டன்னாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் பல்வேறுக் காரணங்களால், கடந்த 3 ஆண்டுகளாக தாமதப்பட்டு வருகிறது. எனவே, இனியும் விரிவாக்க திட்டங்களை ஒத்திப்போடாமல் விரைந்து மேற்கொள்ளும்வகையில், நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என, இந்நிறுவனத்தின் தலைவர் சி.எஸ்.வர்மா தெரிவித்தார்.அண்மையில், இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள இஸ்கோ தொழிற்சாலைக்கு, விஜயம் புரிந்தார். இத்தொழிற்சாலை, 16 ஆயிரத்து, 408 கோடி திட்டச் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து, அவர் கூறும்போது, 'நிறுவனத்தின் பலத் திட்டங்கள் நல்லளவில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. ஒரு சில திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நிறுவத்தின் தொழிற்சாலைகள் அனைத்தும், 100 சதவீத திறனில் செயல்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின், மேலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் திட்டங்களை விரைந்து முடிக்கும் வகையில் அவ்வபோது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)