பதிவு செய்த நாள்
23 ஆக2011
15:14
புதுடில்லி: மாருதி சுசூகி நிறுவனத்தின் சார்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காருக்கு, இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. பிரிமியம் கார் பிரிவில் வரும் ஸ்விஃப்ட் கார், சுசூகி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய பங்காற்றியது. பிரிமியம் கார் சந்தையில் 53 சதவீதத்தை இதன் மூலமே, மாருதி சுசூகி நிறுவனம் தன் வசப்படுத்தியது. இதுவரை 6 லட்சம் ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்கு புதிய ஸ்விஃப்ட் காரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு மாடல்களிலும் இந்த கார் கிடைக்கும். பெட்ரோல் காரில் 1.2 லிட்டர் கே -சிரீஸ் இன்ஜினும், டீஸல் காரில், ஃபியிட் முல்டிஜெட் டீஸல் இன்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். ஏற்கனவே இருந்த ஸ்விஃப்ட் காரை விட, புதிய காரின் நீளமும் அகலமும் சற்று அதிகம். எரிபொருள் சேமிப்பை கருத்தில் கொண்டு, புதிய காரில் பிளாஸ்டிக் பெட்ரோல் டேங்க் பொருத்தப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் கார் எடையில் 30 கிலோவும், டீஸல் கார் எடையில் 15 கிலோவும் குறைந்துள்ளது. பழைய காரில் எடை அதிகமான பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருந்தது. இதன் மூலம், புதிய காரில் எரிபொருளை 6 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த புதிய காருக்கு ஏற்கனவே 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 80 சதவீதம் பேர் டீஸல் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் வேறு எந்த காருக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது இல்லை என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.4.22 லட்சத்தில் இருந்து, ரூ.6.38 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 -ஸ்பீடு கியர் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|