பன்னாட்டுசந்தைகளில் தேவை அதிகரிப்பால் நாட்டின் காபி ஏற்றுமதி 3.26 லட்சம் டன்னாக உயர்வுபன்னாட்டுசந்தைகளில் தேவை அதிகரிப்பால் நாட்டின் காபி ஏற்றுமதி 3.26 லட்சம் ... ... பணவீக்க உயர்வால் ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை பணவீக்க உயர்வால் ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை ...
கோ- ஆப்டெக்ஸ் கெடுபிடி: சேலை உற்பத்திக்கு சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
09:23

காரைக்குடி : கோ- ஆப்டெக்ஸ் கெடுபிடியால் காரைக்குடியில் செட்டிநாடு கைத்தறி சேலை உற்பத்திக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கருணாநிதி நகர், வைத்தியநாதபுரம், காளவாய் பொட்டல், கோவிலூர் மற்றும் திருப்புத்தூர் பகுதியில் 5 ஆயிரம் குடும்பத்தினர் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நூல் தரம், எளிதில் சாயம் போகாமல் இருப்பதால், இங்கு தயாராகும் செட்டிநாடு சேலைகளுக்கு பல மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. காரைக்குடிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும், வெளிநாடுகளிலும் இந்த சேலைகளுக்கு நல்ல மவுசு உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நெசவாளர் சங்கம் மூலமாக 'கோ- ஆப்டெக்ஸ்' நிறுவனம் கைத்தறி சேலைகளை கொள்முதல் செய்து, விற்பனை செய்யும். தற்போது, நெசவாளர் சங்கங்களுக்கு கோ- ஆப்டெக்ஸ் நிறுவன அதிகாரிகள் விதித்துள்ள பல கெடுபிடிகளால், செட்டிநாடு சேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க செயலாளர் பழனியப்பன் கூறுகையில், '' ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னதாக 'கோ- ஆப்டெக்ஸ்' நிறுவனம் மூலம், காரைக்குடியில் செட்டிநாடு சேலைகள் கொள்முதல் செய்வது வழக்கம். தற்போது, 'கோ- ஆப்டெக்ஸ்' நிறுவனம், 60 டிசைன்களில் தயாராகும் செட்டிநாடு சேலைகளில் 10க்கும் குறைவான 'டிசைன்' களில் மட்டுமே அதிகமான சேலைகளை உற்பத்தி செய்யும்படி, கெடுபிடி விதித்துள்ளது. இதனால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட டிசைன் சேலைகள் உற்பத்தி செய்வதற்கு நெசவாளர் சங்கங்களில் போதிய நிதி வசதி இல்லை. இதனால், கோ- ஆப்டெக்ஸ் விரும்பிய டிசைன்களில் செட்டிநாடு சேலை தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)