ஒரு ரூபாய் நாணயத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள மொய் கவர்ஒரு ரூபாய் நாணயத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள மொய் கவர் ... கொப்பரை விலை தொடர் சரிவு கொப்பரை விலை தொடர் சரிவு ...
துபாய் செல்லும் தேங்காய் மட்டை தூள் கேக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
09:56

கழிவைக் கூட காசாக்கலாம் என்பதை நிரூபிக்கின்றனர், சோழவந்தான் முள்ளிப்பள்ளம் தென்னை விவசாயிகள். தேங்காய் உரித்த பின், வீணாகும் மட்டைகளை மிஷினில் தூளாக்குகின்றனர். அந்த தூள்களை தனியாகவும், நார்களை (மஞ்சுகளை) தனியாகவும் பிரிக்கின்றனர். மிகவும் பொடியான தூள்களை, கோழி வளர்க்கும் இடங்களில் வெப்பம் தாக்காமல் இருக்கவும், தூள் மற்றும் சிறு நார் கலந்தவற்றை, 'தேங்காய் மட்டை கேக்' தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். சோழவந்தான் பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகம். தேங்காயை உரித்து நார் எடுத்த பின், அதில் கிடைக்கும் தூள்கள் யாருக்கும் பயன்படாமல் இருந்தது. வீணாகக் கிடந்த அந்த தூள்களை வைகை கரையோரம் கொட்டி, மாசுபடுத்தினர். ஆற்றில் வெள்ளம் வரும் போது, 50 ஆட்களை கூலிக்கு நியமித்து, ஆற்றிற்குள் அந்த தூள்களை தள்ளினர். இது ஆற்று நீரை மாசுபடுத்துகிறது என, சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. தற்போது இந்த தென்னங்கழிவு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருளாகிவிட்டது. முள்ளிப்பள்ளம் பூபதி மாணிக்கம் தொழிற்சாலையில், 10 சதவீத நாருடன் உள்ள தேங்காய் மட்டை தூள்களில் தண்ணீர் குழாய் மூலம் அடித்து, அதில் உள்ள உப்புச்சத்தை குறைக்கின்றனர். பின் அதை பதப்படுத்தி காய வைத்து பெரிய நார்களை அகற்றிவிட்டு, அத்தூளில் 10 சதவீத நார்கள் மட்டும் இருக்கும்படி செய்கின்றனர். அதை 'டை' மிஷின் மூலம் 2 அடி நீள, அகலத்தில் கேக்குகளாக தயாரிக்கின்றனர். தொழிலாளி வீராசாமி கூறுகையில், ''ஒரு லாரி மட்டை தூளை 2,500 ரூபாய் வரை வாங்குகிறோம். அதிலிருந்து தயாராகும் ஒரு கேக், 5 கிலோ எடையுடையது. இதை, 25 முதல் 28 ரூபாய் வரை விலைக்கு விற்கிறோம். வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு 2 டன் கேக், மழைக் காலத்தில் ஒன்றரை டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கேக், 70 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். பாலைவனங்களில் பயிர் செய்வோர் வாங்கிச் செல்கின்றனர். 'இவை துபாய்க்கு அதிகம் செல்கிறது. துபாயில் காய்கறி பயிரிடுவோர், செடியின் அடிப்பாகத்தில் தண்ணீரில் ஊற வைத்த இந்த நார் கேக்கை போடுவர். இதனால், செடியின் வேர்ப்பகுதி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த கேக்கை உபயோகப்படுத்துவதால், 20 சதவீதம் விளைச்சல் அதிகமாக இருக்கும். இங்கிருந்து மட்டும் மாதம், 50 டன் கேக்குகளை துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். மழைக் காலங்களில் 15 முதல் 20 டன் வரை என உற்பத்தி குறைகிறது,'' என்றார்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)