பதிவு செய்த நாள்
29 ஆக2011
02:10
மும்பை:நடப்பு பருவத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொது உரிம அடிப்படையில், பருத்தி ஏற்றுமதிக்கான கால அளவை, செப்டம்பர் மாதத்திற்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என, வேளாண் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. பருத்தி அதிகளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் முக்கிய மாநிலங்களில், பயிரிடும் பரப்பளவு அதிகரிக்கப்பட் டுள்ளது. இதனால், நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை நாட்டில், 1.17 கோடி எக்டேரில், பருத்தி விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பரப்பளவை விட, 10 சதவீதம் (1.07 கோடி எக்டேர்) அதிகம். எனவே, இவ்வாண்டு பருத்தி உற்பத்தி அதிகரிக்கும். பருத்தி விவசாயி களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால், அரசு, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்திய பருத்தி கழகத்தின் தற்காலிக புள்ளி விவரத்தின்படி, உள்நாட்டில் பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு, 1.20 கோடி எக்டேராக உயர வாய்ப்புள்ளது. இதனடிப்படையில், நடப்பு பருவத்தில், 3.50 கோடி பொதிகள் அளவிற்கு பருத்தி உற்பத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு, நெல் மற்றும் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பருப்பு வகைகள் மற்றும் இதர உணவு தானியங்கள் சாகுபடி பரப்பளவு குறையும் எனத் தெரிகிறது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா ஆகிய மூன்று மாநிலங்களில், பருத்தி சாகுபடி பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கேண்டி (360 கிலோ) பருத்தி விலை, 38,000 - 39,000 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டை விட குறைவாகும். உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில், பருத்திக்கான தேவை குறைந்ததால், இதன் விலை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|