2014-15ல் டைட்டன் வருமானம் அதிகரிக்கும்2014-15ல் டைட்டன் வருமானம் அதிகரிக்கும் ... விழாக்களில் ஜொலிக்கும் வெல்வெட் பைகள் விழாக்களில் ஜொலிக்கும் வெல்வெட் பைகள் ...
பருத்தி ஏற்றுமதி காலத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2011
02:10

மும்பை:நடப்பு பருவத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொது உரிம அடிப்படையில், பருத்தி ஏற்றுமதிக்கான கால அளவை, செப்டம்பர் மாதத்திற்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என, வேளாண் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. பருத்தி அதிகளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் முக்கிய மாநிலங்களில், பயிரிடும் பரப்பளவு அதிகரிக்கப்பட் டுள்ளது. இதனால், நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை நாட்டில், 1.17 கோடி எக்டேரில், பருத்தி விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பரப்பளவை விட, 10 சதவீதம் (1.07 கோடி எக்டேர்) அதிகம். எனவே, இவ்வாண்டு பருத்தி உற்பத்தி அதிகரிக்கும். பருத்தி விவசாயி களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால், அரசு, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்திய பருத்தி கழகத்தின் தற்காலிக புள்ளி விவரத்தின்படி, உள்நாட்டில் பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவு, 1.20 கோடி எக்டேராக உயர வாய்ப்புள்ளது. இதனடிப்படையில், நடப்பு பருவத்தில், 3.50 கோடி பொதிகள் அளவிற்கு பருத்தி உற்பத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு, நெல் மற்றும் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பருப்பு வகைகள் மற்றும் இதர உணவு தானியங்கள் சாகுபடி பரப்பளவு குறையும் எனத் தெரிகிறது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா ஆகிய மூன்று மாநிலங்களில், பருத்தி சாகுபடி பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கேண்டி (360 கிலோ) பருத்தி விலை, 38,000 - 39,000 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டை விட குறைவாகும். உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில், பருத்திக்கான தேவை குறைந்ததால், இதன் விலை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)