பதிவு செய்த நாள்
31 ஆக2011
00:25
புதுடில்லி: பொதுத்துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 5 சதவீதம் அதிகரித்து, 45.28 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 43.13 கோடி டன்னாக இருந்தது. இத்தகவலை, ராஜ்யசபாவில் தெரிவித்த மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக, ”ற்றுச் ‹ழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறுவது தாமதமாவதால், நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.எனினும், நிறுவனத்தின் உற்பத்தி யை, 5 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - ஜூலை மாதங்களில், கோல் இந்தியா நிறுவனம், நால்கோ நிறுவனத்தின் மின்சாரம் மற்றும் அலுமினியம் தொழிற்சாலைகளுக்கு, 18.28 லட்சம் டன் நிலக்கரியை வழங்கியுள்ளது. ஒப்பந்தப்படி, 19.10 லட்சம் டன் நிலக்கரியை வழங்கியிருக்க வேண்டும்.இதே போல், என்.டி.பி.சி., நிறுவனத்திற்கு, ஒப்பந்த அளவான, 4 கோடி டன் நிலக்கரிக்கு பதிலாக, 3.66 கோடி டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது.சென்ற 2010ம் ஆண்டு ஜூலை முதல், நடப்பாண்டு ஜூலை வரை, மின் நிலையங்களிடம் உள்ள நிலக்கரி இருப்பு, 1.15 கோடி டன்னில் இருந்து, 1.31 கோடி டன்னாக உயர்ந்துள்ளதாக, மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் பிரகாஷ்பாபு பாட்டீல் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், ரயில்வே வேகன்கள் கிடைப்பதைப் பொறுத்து, நாளொன்றுக்கு சராசரியாக, 190.4 வேகன்கள் மூலம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, 44.70 கோடி டன் நிலக்கரி அனுப்ப முடியும் என அவர் மேலும் கூறினார்.தேவைக்கும் அளிப்பிற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு, அயல்நாட்டு நிலக்கரி நிறுவனங்களை கையகப்படுத்தவும், கோல் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தவிர, அண்மையில் இந்நிறுவனம் மொசாம்பிக் நாட்டில் கையகப்படுத்திய, இரண்டு நிலக்கரி ”ரங்கங்களில், உற்பத்தியை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|