விசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை: கோ - ஆப்டெக்ஸ் பரிந்துரைவிசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை: கோ - ... ... உருக்கு பொருட்கள் இறக்குமதி ரூ.26,387 கோடியாக உயர்வு உருக்கு பொருட்கள் இறக்குமதி ரூ.26,387 கோடியாக உயர்வு ...
கோல் இந்தியா நிறுவனம்: நிலக்கரி உற்பத்தி 5 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
00:25

புதுடில்லி: பொதுத்துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 5 சதவீதம் அதிகரித்து, 45.28 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 43.13 கோடி டன்னாக இருந்தது. இத்தகவலை, ராஜ்யசபாவில் தெரிவித்த மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக, ”ற்றுச் ‹ழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறுவது தாமதமாவதால், நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.எனினும், நிறுவனத்தின் உற்பத்தி யை, 5 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - ஜூலை மாதங்களில், கோல் இந்தியா நிறுவனம், நால்கோ நிறுவனத்தின் மின்சாரம் மற்றும் அலுமினியம் தொழிற்சாலைகளுக்கு, 18.28 லட்சம் டன் நிலக்கரியை வழங்கியுள்ளது. ஒப்பந்தப்படி, 19.10 லட்சம் டன் நிலக்கரியை வழங்கியிருக்க வேண்டும்.இதே போல், என்.டி.பி.சி., நிறுவனத்திற்கு, ஒப்பந்த அளவான, 4 கோடி டன் நிலக்கரிக்கு பதிலாக, 3.66 கோடி டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது.சென்ற 2010ம் ஆண்டு ஜூலை முதல், நடப்பாண்டு ஜூலை வரை, மின் நிலையங்களிடம் உள்ள நிலக்கரி இருப்பு, 1.15 கோடி டன்னில் இருந்து, 1.31 கோடி டன்னாக உயர்ந்துள்ளதாக, மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் பிரகாஷ்பாபு பாட்டீல் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், ரயில்வே வேகன்கள் கிடைப்பதைப் பொறுத்து, நாளொன்றுக்கு சராசரியாக, 190.4 வேகன்கள் மூலம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, 44.70 கோடி டன் நிலக்கரி அனுப்ப முடியும் என அவர் மேலும் கூறினார்.தேவைக்கும் அளிப்பிற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு, அயல்நாட்டு நிலக்கரி நிறுவனங்களை கையகப்படுத்தவும், கோல் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தவிர, அண்மையில் இந்நிறுவனம் மொசாம்பிக் நாட்டில் கையகப்படுத்திய, இரண்டு நிலக்கரி ”ரங்கங்களில், உற்பத்தியை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)