உலக சந்தைகளில் தானியங்கள் விலை உயர்வு : இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புஉலக சந்தைகளில் தானியங்கள் விலை உயர்வு : இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ... ... ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் 1,222 கோடி டாலர் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் இந்திய நிறுவனங்களின் ... ...
உருக்கு பொருள் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2011
03:54

மும்பை : உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள், <உருக்கு பொருள்களின் விலையை, டன்னுக்கு, 1,000 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. உருக்கு பொருள்கள் தயாரிப்பதற்கு, முக்கிய மூலப் பொருள்களான, இரும்புத் தாது, மற்றும் சிறப்பு வகை நிலக்கரியின் விலை, பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்நிறுவனங்களின் லாப வரம்பு, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், இதன் விலையை <உயர்த்த முடிவு செய்துள்ளதாக, தெரியவந்துள்ளது. தற்போது, வெப்ப உருட்டு, அடிப்படை உருக்கு பொருள்களின் விலை, டன் ஒன்று, 35 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. அண்மைக் காலத்தில், கோக்கிங் கோல் எனப்படும், சிறப்பு வகை நிலக்கரியின் விலை, 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று, உருக்கு பொருள்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருளான, ஒரு டன் இரும்புத் தாதுவின் விலை, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, 180 டாலராக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் டன்னுக்கு, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டில் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால், இத்துறை நிறுவனங்கள், உருக்கு பொருள்களின் விலையை உயர்த்தாமல் <உள்ளன. ஆனால், மூலப் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வு, நிறுவனங்களின் செயல்பாட்டை வெகுவாக பாதித்துள்ளது. எனவே, வரும் வாரத்தில், இத்துறை நிறுவனங்கள், உருக்கு பொருள்களின் விலையை <உயர்த்தக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, செயில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டாட்டா ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய நான்கு பெரிய நிறுவனங்கள், விலை உயர்வு குறித்து, வரும் வாரத்தில், அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. மூலப் பொருள்கள் விலை உயர்ந்து வரும் அதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தில், இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கு, சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. இதனால், கர்நாடக மாநிலத்தில், தொழிற்சாலையை கொண்டுள்ள உருக்கு துறை நிறுவனங்களின் உற்பத்தி, தடைபட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)