பதிவு செய்த நாள்
04 செப்2011
03:54
மும்பை : உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள், <உருக்கு பொருள்களின் விலையை, டன்னுக்கு, 1,000 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. உருக்கு பொருள்கள் தயாரிப்பதற்கு, முக்கிய மூலப் பொருள்களான, இரும்புத் தாது, மற்றும் சிறப்பு வகை நிலக்கரியின் விலை, பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்நிறுவனங்களின் லாப வரம்பு, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், இதன் விலையை <உயர்த்த முடிவு செய்துள்ளதாக, தெரியவந்துள்ளது. தற்போது, வெப்ப உருட்டு, அடிப்படை உருக்கு பொருள்களின் விலை, டன் ஒன்று, 35 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. அண்மைக் காலத்தில், கோக்கிங் கோல் எனப்படும், சிறப்பு வகை நிலக்கரியின் விலை, 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போன்று, உருக்கு பொருள்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருளான, ஒரு டன் இரும்புத் தாதுவின் விலை, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, 180 டாலராக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் டன்னுக்கு, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டில் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால், இத்துறை நிறுவனங்கள், உருக்கு பொருள்களின் விலையை உயர்த்தாமல் <உள்ளன. ஆனால், மூலப் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வு, நிறுவனங்களின் செயல்பாட்டை வெகுவாக பாதித்துள்ளது. எனவே, வரும் வாரத்தில், இத்துறை நிறுவனங்கள், உருக்கு பொருள்களின் விலையை <உயர்த்தக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, செயில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டாட்டா ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய நான்கு பெரிய நிறுவனங்கள், விலை உயர்வு குறித்து, வரும் வாரத்தில், அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. மூலப் பொருள்கள் விலை உயர்ந்து வரும் அதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தில், இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கு, சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. இதனால், கர்நாடக மாநிலத்தில், தொழிற்சாலையை கொண்டுள்ள உருக்கு துறை நிறுவனங்களின் உற்பத்தி, தடைபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|