பதிவு செய்த நாள்
19 செப்2011
10:24
மும்பை: நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, மத்திய காலாண்டிற் கான நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, மீண்டும் 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் வெளியிட்டார்.இதனையடுத்து தேசியவங்கிகள் மற்றும் தனியார்வங்கிகள் வட்டிவிகிதத்தை மாற்றியமைக்க துவங்கியுள்ளது. இந்நிலையி்ல் ஸ்டேட் வங்கியின் சேர்மன் பிரதீப் சவுத்ரி அடுத்த 15 நாட்களுக்குள் புதிய வட்டிவிகிதம் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே போல் பஞ்சாப் சிந்த் வங்கியின் செயல் இயக்குனர் ஆனந்தும் 15 நாட்களுக்குள் புதிய அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான நரேந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்இம் மாத இறுதியில்புதிய வட்டி விகிதத்தை வெளியிடப் போவதாகவும் தெரிவி்த்துள்ளார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|