ஐரோப்பிய நிதி நெருக்கடி : "சென்செக்ஸ்' 188 புள்ளிகள் சரிவுஐரோப்பிய நிதி நெருக்கடி : "சென்செக்ஸ்' 188 புள்ளிகள் சரிவு ... ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குச்சந்தை ...
அதிரடி விலை குறைப்பில் சிறிய மருந்து நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2011
04:19

சிறிய மருந்து நிறுவனங்கள், விலை குறைப்பு, விற்பனையில் சலுகை போன்றவற்றால் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்நாட்டு மருந்துகளின் விற்பனை, தற்போது ஆண்டுக்கு 57 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இதில், நோய் எதிர்ப்பு மருந்துகள், இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவற்றுக்கான நிவாரண மருந்துகளின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. இப்பிரிவில், முன்னேறும் சிறிய நிறுவனங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. இந்நிறுவனங்கள், இத்துறையில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்துள்ளன. மேலும், மருந்து விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகளையும் வினியோகஸ்தர்களுக்கு வழங்கி வருகின்றன. இத்தகைய செயல்பாடு காரணமாக, ரான்பாக்சி, சிப்லா போன்ற பெரிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டில், சென்ற ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதங்களில், ரான்பாக்சி நிறுவனத்தின் உள்நாட்டு மருந்து விற்பனை 16 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருந்தது. சிறிய நிறுவனங்களின் போட்டி காரணமாக, இந்த வளர்ச்சி, சென்ற ஆகஸ்ட் மாதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போன்று சிப்லா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, கடந்த மூன்று மாதங்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மருந்து துறையில் மிகப் பெரிய அளவில் வர்த்தகத்தை கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாக கெடிலா விளங்குகிறது. இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, நடப்பு காலண்டர் ஆண்டில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் 14 சதவீதம் முதல் 25 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி, சென்ற ஜூலை மாதம் 6 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாதம் 8.6 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளது. அதே சமயம், மேன்கைன்டு, மேக்லியாட்ஸ் போன்ற முன்னேறும் மருந்து நிறுவனங்களின் விற்பனை, அளவின் அடிப்படையில் அதிகரித்துள்ளது என பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் ஆய்வாளர்களான எஸ்.அருண் மற்றும் அரவிந்த் போத்ரா ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து பெரும்பாலான ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி தற்காலிகமானது என்று தெரிவித்தனர். பிராண்டுகளின் மதிப்பு மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் பிரிவிலான வளர்ச்சியின் மூலம், சிறிய நிறுவனங்களின் போட்டியை பெரிய நிறுவனங்கள் சுலபமாக சமாளிக்கும் என்றும் அவர்கள் கூறினர். மருந்து கடைக்காரர் ஒருவர் கூறும்போது, மருந்து விற்பனையில் சலுகைகளை அளிப்பதால், அளவின் அடிப்படையில் விற்பனை உயரும் என்றபோதிலும், சிறிய நிறுவனங்களின் லாபவரம்பு குறைந்து விடும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதனால், சந்தையை கலக்கி வரும் சிறிய நிறுவனங்களின் தாக்கம், குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்றும், நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மருந்துகளின் மொத்த விற்பனையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் பங்களிப்பு 80 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, இவ்வகை மருந்துகளை தயாரிக்கும் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும். மேலும், இப்பிரிவிலான வளர்ச்சி, நீண்ட கால அடிப்படையிலானது என்பதால், பெரிய நிறுவனங்கள், தற்போதைய பாதிப்பை சுலபமாக எதிர் கொண்டு சமாளித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருந்து துறையின் விற்பனை வளர்ச்சி சென்ற ஜூலை மாதம் 8.9 சதவீதமாக இருந்தது. இது, சென்ற ஆகஸ்ட் மாதம் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மழைக்காலம் நீடிப்பதால், நோய் எதிர்ப்பு மற்றும் தீவிர நோய்களுக்கான மருந்துகளின் விற்பனை உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மருந்து துறையின் விற்பனை வளர்ச்சி 15 சதவீதம் என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)