ஹோண்டா மோட்டார் விற்பனை 44 % அதிகரிப்புஹோண்டா மோட்டார் விற்பனை 44 % அதிகரிப்பு ... மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை மையங்களை அதிகரிக்க திட்டம் மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை மையங்களை அதிகரிக்க திட்டம் ...
கோலி வடபாவ் நிறுவனம்சர்வதேச தொழில்நுட்பத்தில் தயாராகும் சாமான்ய மக்களின் துரித உணவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2011
01:05

வடபாவ்.... இது, மகாராஷ்ட்ர மக்களின் வாழ்வோடு கலந்து விட்ட ஒரு வகை துரித உணவு. அங்குள்ள சாலையோர உணவகங்களில் இதுவே பிரதான ஐட்டம். சாமான்ய மக்களும், செல்வந்தர்களும் பாரபட்சமின்றி விரும்பி சாப்பிடும் வடபாவ், இன்று தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் முயற்சியால் கார்ப்பரேட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆம்! தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தை பூர்வீகமாக கொண்ட வெங்டேஷ் ஐயர், இந்தியாவில் முதன் முதலாக அமெரிக்க தொழில்நுட்பத்தில், கைபடாமல், சுகாதாரமான முறையில், சுவையான வடபாவை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறார்.இவர், தமது நண்பர் ஷிவதாஸ் மேனனுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோலி வடபாவ் என்ற நிறுவனம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், வடபாவ் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கோலி வடபாவ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்டேஷ் ஐயர், வடபாவ் குறித்து பல சுவையான தகவல்களை தினமலர் இதழுடன் பகிர்ந்து கொண்டார். அவற்றின் சாராம்சம்...... வடபாவ் எந்த மாதிரியான உணவு? உருளைக்கிழங்கு, மைதா, கடலை மாவு, மசாலா பொருள்கள் இவற்றின் கலவை தான் வடபாவ். இது, மெக்டொனா ல்டின் பெர்கர் போன்றது. அதாவது, உருளைக்கிழங்கு மசியலும், மசாலாவும் சேர்ந்த தட்டையை, கடலை மாவில் புரட்டி, பொரித்தெடுத்து, மைதாவில் செய்யப்பட்ட "பன்' நடுவே வைத்து வழங்கப்படும் உணவு தான் வடபாவ். இது, பரபரப்பான மும்பை போன்ற நகரங்களில், அவசர கதியில் வேலைக்கு செல்வோரின் துரித உணவாக விளங்குகிறது. அங்கு வடபாவ் இல்லாத சாலையோர உணவகங்களை காண்பது அரிது. சரி.. எத்தனையோ தொழில்கள் இருக்க... வடபாவ் தொழிலில் இறங்க என்ன காரணம்? எனது பூர்வீகம் தமிழகம் என்றாலும், நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் மும்பையில் தான். 1989ம் ஆண்டு கார்ப்பரேஷன் வங்கியில் நிர்வாகப் பிரிவில் பயிற்சியாளராக சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் கழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த சேவை வழங்கும் நிறுவனத்தை தொடங்கினேன். 1995ம் ஆண்டு உணவு சார்ந்த தொழில் தொடங்க விரும்பிய போதுதான், சுலபமாக, கையில் எடுத்துச் செல்லக் கூடிய, எந்த இடத்திலும் உண்ணக் கூடிய வடபாவ் உணவு என்னை ஈர்த்தது. பாரபட்சமின்றி அனைவரும் விரும்பி உண்ணும் வடபாவை, சுகாதாரமான முறையில் சுவையாக தயாரித்து வழங்கினால் சந்தையை எளிதாக பிடிக்கலாம் என்று தீர்மா னித்தேன். ஆனால் எனது கனவு கைகூட 9 ஆண்டுகள் ஆனது. காலதாமதத்திற்கு என்ன காரணம்...? தொழிலில் இறங்குவதற்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வுகள், நிதி திரட்டுவதில் ஏற்பட்ட இடர்பாடுகள் என, எல்லா வற்றையும் கடக்க வேண்டியிருந்தது. குடும்பத்தினர், நண்பர்களின் பொருளுதவி, எனது சேமிப்பு மற்றும் பங்கு தாரர் ஷிவதாஸ் மேனனின் ஒத்துழைப்புடன் 1 கோடி ரூபாய் முதலீட்டில் 2003ம் ஆண்டு, கோலி வடபாவ் நிறுவனம் உதய மானது. மும்பை, டோம்பிவில்லி பகுதியில் 500 சதுர அடி சமையலறையில், 20 பணியாளர்களின் துணையுடன் முதன் முதலாக வடபாவ் தயாரிப்பு தொடங்கியது. ஓராண்டு காலத்தில், ஏராளமான கடைகளுக்கு வடபாவை விற்பனை செய்யத் தொடங்கினோம். சிறந்த தரத்துடன், நியாயமான விலையை நிர்ணயித்ததால், எங்கள் தயாரிப்பிற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில், 2004ம் ஆண்டு கல்யாண் நகரில், கோலி வடபாவ் என்ற பெயரில் முதன் முதலாக விற்பனையகத்தை தொடங்கினோம். இப்போது எத்தனை கோலி வடபாவ் கடைகள் உள்ளன? நாங்கள் தனி உரிம அடிப்படையில் தான் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறோம். அதாவது, கோலி வடபாவ் என்ற பெயரில் கடைகளை அமைக்க உரிமை வழங்குகிறோம். இங்கு விற்பனை செய்யப்படும் வடபாவ் உணவு வகைகளை நாங்களே சப்ளை செய்கிறோம். இந்த வகையில் தற்போது மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநி லங்களில் 30 நகரங்களில் 125 கோலி வடபாவ் கடைகள் இயங்கி வருகின்றன. இதுவரை 4 கோடி வடபாவ்களை விற்பனை செய்துள்ளோம். குறுகிய காலத்தில் இத்தகைய வளர்ச்சி எப்படி சாத்தியமாயிற்று? அயராத உழைப்பு, தளராத தன்னம்பிக்கை ஆகியவை தான் வளர்ச்சிக்கு காரணம். நீங்கள் சொல்வது போல் இந்த வளர்ச்சி சாதாரணமாக வந்து விடவில்லை. தொடக்கத்தில் வடபாவை விற்பனை செய்யும் போது பல்வேறு பிரச்னை களை சந்தித்தோம். உணவு விற்பனையில் உள்ள மிகப்பெரிய இடர்பாடு, உணவு மிச்சமாகி கெட்டு விடுவது தான். இதைத் தவிர்க்க, வடபாவ் தயாரிப்பில் புற ஊதாக் கதிர், நைட்ரஜன் வாயு, பிளாஸ்ட் சில் ரெப்ரிஜெரேஷன் தொழில் நுட்பம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினோம். ஆனால், உணவின் ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியவில்லை. இதனால், இழப்பை சந்தித்தோம். நிறுவனத்தை நம்பி முதலீடு செய்துள்ளவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொழிலை தொடர முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டது. அப்போது தான் கடைசி முயற்சியாக எங்களின் தயாரிப்பு குறித்த விவரத்தை அமெரிக்காவின் ஓ.எஸ்.ஐ நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தோம். அடுத்து என்ன நடந்தது? மூன்று மாத காலத்திற்குப் பிறகு நல்ல பதில் கிடைத்தது. ஓ.எஸ்.ஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான விஸ்டா பிராசஸ்டு புட்ஸ் (வி.பி.பி),எங்களுக்கு உதவ முன்வந்தது. மும்பையில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், மெக் டொனால்டு நிறுவனத்திற்கான பெர்கர் உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதே தொழிற்சாலையில் சர்வதேச தரத்தில் தற்போது எங்களின் வடபாவ் தயாரிக்கப்படுகிறது. வடபாவ் தயாரிப்பில் உங்களின் பங்கென்ன? வடபாவ் தயாரிப்பதற்கு தேவையான 18 மசாலாக்களை கொண்ட விழுதை எங்கள் நிறுவனம் தயாரித்து, பீப்பாய்களில் அடைத்து, வி.பி.பி நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இந்த மசாலாவில் அடங்கியுள்ள கூட்டுப் பொருள்கள் ரகசிய மானவை. இந்த மசாலாவுடன், வி.பி.பி நிறுவனம், பிரத்யேகமான உருளைக்கிழங்கு மசியலையும் கடலை மாவையும் சேர்த்து தட்டை வடிவ உணவாக மாற்றுகிறது. இந்த உணவு, புற ஊதாக் கதிர், மெட்டல் டிடெக்டர், உள்ளிட்ட சோதனை களுக்கு உட்படுத்தப்படுகிறது. பின்னர், இது மைனஸ் 18 டிகிரி செல்ஷியசில் குளிர்விக்கப்பட்டு, கடினமான திட உணவாக மாற்றப்பட்டு, பைககளில் அடைக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக, கைபடாத வகையில், இயந்திரங்கள் வாயிலா கவே மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், சுகாதாரமான, சுவையான, சர்வதேச தரத்தில் 7 வகையான வடபாவை எங்களால் உருவாக்க முடிகிறது. இந்த வடபாவ் உணவின் ஆயுள் காலம் 9மாதங்கள். இவற்றை எப்படி விற்பனை செய்கிறீர்கள்? வி.பி.பி தொழிற்சாலை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வடபாவ் தயாரிக்கும் திறன் கொண்டது. இங்கு தயாரிக்கப்படும் வடபாவை பல்வேறு நகரங்களில் உள்ள தனி உரிமக் கிளைகளுக்கு அனுப்புகிறோம். அங்கு, வடபாவ் சுடச் சுட பொரிக்கப்பட்டு, "பன்' நடுவே வைத்து, பிரத்யேக சட்னியுடன் வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் பற்றி கூறவும்.... தற்போது தென்னிந்தியாவில் மேலும் 150 தனி உரிமக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 3-5 ஆண்டு களில் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க உள்ளோம். இந்த விரிவாக்க திட்டங்களுக்காக, சென்னை யை சேர்ந்த வென்சர் ஈஸ்ட் என்ற தனியார் துணிகர பங்கு முதலீட்டு நிறுவனம் 21 கோடி ரூபாய் வழங்குகிறது. சென்னையில் எக்ஸ்பிரஸ் அவின்யூவில், சோதனை அடிப்படையில் கோலி வடபாவ் கடை செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் கடைகள் திறக்கப்பட உள்ளன. இந்த தொழிலில் வேலைவாய்ப்பு எப்படி? தனி உரிமக் கடை தொடங்க 10 லட்ச ரூபாய் முதலீடு இருந்தால் போதும். வர்த்தகத்தை மேம்படுத் துவதற்கான ஆதர வையும், ஆலோசனைகளையும் நிறுவனம் வழங்கும். வடபாவ் போன்ற பிரத்யேக உணவுகளை தயாரிக்கும் தொழி லைக் கற்றவர்களுக்கு எங்கும் வேலை வாய்ப்பு உள்ளது. நாங்கள், வடபாவ் தயாரிப்பு, நிர்வாகம் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்க உள்ளோம். ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு, சான்றிதழுடன் கோலி வடபாவ் உணவகங்கள் முதல் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகள் வரை வேலை வாய்ப்பு வழங்கப்படும். - ஏ.கே.விஜய்தேவ் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)