வடமாநில வியாபாரிகள் அதிக அளவில் வருகை களைகட்டுகிறது தமிழக ஜவுளி சந்தைவடமாநில வியாபாரிகள் அதிக அளவில் வருகை களைகட்டுகிறது தமிழக ஜவுளி சந்தை ... தங்கம் விலை சற்று குறைந்தது தங்கம் விலை சற்று குறைந்தது ...
நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2011
11:03

புதுடில்லி: நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது. வெள்ளம், வேலைநிறுத்தம், தெலுங்கானா போராட்டம் போன்றவற்றால் நிலக்கரி சுரங்கப் பணிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால், நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறனான 99,503 மெகா வாட்டில் பாதியளவு உற்பத்தி திறன் கொண்ட சுமார் 29 முக்கிய அனல் மின் நிலையங்களில் 4 நாள்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளன. மேலும், 12 சதவீத திறன் கொண்ட நிறுவனங்கள் 7 தினங்களுக்கு போதுமான கையிருப்பை மட்டுமே நம்பியுள்ளன. சாதாரணமாக, தடையற்ற மின் உற்பத்திக்காக நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 நாள்களுக்கு தேவையான நிலக்கரியை கையிருப்பு வைப்பது வழக்கம். பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி. சுமார் 5,000 மெகா வாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாகவும், நீர் அளவு குறைந்து போனதால், நீர் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நிலக்கரி அமைச்சகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பற்றாக்குறையால் அதிகம் பாதிப்புக்குள்ளானவை தென் மாநிலங்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)