பதிவு செய்த நாள்
29 அக்2011
12:56
பெங்களூரு : ஆரக்கிள் இந்தியா நிறுவனம், 2012ம் ஆண்டு மே மாதத்திற்குள் புதிதாக 3,500 பேரை பணியமர்த்த திட்டமி்டடுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆரக்கிள் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தீப் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆரக்கிள் இந்தியா நிறுவனத்தில் தற்போதைய அளவில் 21 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாகவும், சேவைகளை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் வழங்கும் பொருட்டு தொழில்நுட்பம் மற்றும் விற்பனை பிரிவுகளில் புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணிவாய்ப்பு குறித்த விபரங்கள், சமூக வலைத் தளங்களான டுவிட்டர், பேஸ்புக், லிங்க்டுஇன், யூடியூப் மற்றும் ஆரக்கிள் ஹெச்ஆர் வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன என்றும், மேலும் அதன்மூலமாகவே, பணியிடங்கள் நிரப்ப்பப்ட உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|