பதிவு செய்த நாள்
17 நவ2011
15:04
புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் நிலக்கரி மற்றும் இரும்பு உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து சரிவடைந்ததால் இந்திய ரயில்வே துறை நிர்ணயித்த வருவாயை விட ரூ.300 கோடி குறைவாகவே பெறப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்திய ரயில்வே துறை ரூ.8,374.13 கோடியை லாபமாக பெற்றுள்ளது. ஆனால் இது ரயில்வே துறை இலக்காக நிர்ணயித்த ரூ.8,674.92 கோடியை விட 3.47 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ரூ.7,714.49 கோடியை இந்திய ரயில்வே வருமானமாக பெற்றுள்ளது. அதே சமயம் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கால அளவில் இந்திய ரயில்வேயின் வருமானம் 10.13 சதவீதம் அதிகரித்து ரூ.57,338.09 கோடியாக உள்ளது. இதே கால அளவில் சரக்கு போக்குவரத்து மூலம் பெற்ற வருமானமும் 9.98 சதவீதம் அதிகரித்து ரூ.38,085.83 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் பயணிகள் போக்குவரத்து மூலம் பெற்ற வருமானம் 9.73 சதவீதம் அதிகரித்து ரூ.16,321.09 கோடியாக உள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மொத்தம் 4,817.67 மில்லியன் பயணிகள் ரயில் மூலம் பயணம் செய்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|