விலை உயர்வு, பற்றாக்குறையால் நிலக்கரி மீதான சுங்க வரியை நீக்க கோரிக்கைவிலை உயர்வு, பற்றாக்குறையால் நிலக்கரி மீதான சுங்க வரியை நீக்க கோரிக்கை ... இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ...
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30,000 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2011
00:10

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, அடுத்த 10 ஆண்டுகளில், 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம், கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் இழப்பை ஈடு செய்து, மீண்டும் லாப பாதைக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இந்நிறுவனம் ரொக்க லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, நிறுவனம் லாப பாதைக்கு திரும்பும் நிலையில், மத்திய அரசு, இந்நிறுவனத்தை கண்காணித்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், குழு ஒன்றை அமைக்க உள்ளது. இக்குழுவில், மத்திய நிதி அமைச்சகத்தின் பிரதிநிதியும் இடம் பெறுவார். நிறுவனத்தின் செயல்பாடு, செலவினங்களை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.ஏர் இந்தியா நிறுவனம், தற்போது, மொத்த இருக்கைகளில், 67 சதவீத பயணிகளுடன் இயங்கி வருகிறது. இது, வரும் 2015ம் ஆண்டிற்குள், 73 சதவீதம் என்றளவில் மேம்படுத்தப்படும். மேலும், நிறுவனத்தின் விமானங்கள், தற்போது, 71.7 சதவீத அளவிற்கு குறிப்பிட்ட நேரத்தில் விமான சேவையை வழங்கி வருகின்றன. இது, வரும் 2015ம் ஆண்டிற்குள், 90 சதவீதம் என்றளவில் உயர்த்தப்படும்.ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களின், மனித வளம் குறித்த கொள்கை திட்டம், மறு பரிசீலனை செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களில், தன் விருப்ப ஓய்வுத் திட்டம் குறித்தும் முடிவெடுக்கப்படும்.கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலுமாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு, 20 ஆயிரத்து, 320 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, நிறுவனத்தின் இழப்புகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு லாபம் ஈட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லாபம் ஈட்ட தொடங்கியவுடன், ஏர் இந்தியா தொடர்ந்து நன்கு செயல்படும் வகையில், சிறந்த கூட்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தவும், அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)