பதிவு செய்த நாள்
25 நவ2011
09:16
விலையேற்றம் காரணமாக, ஆவின் பால் மாத அட்டை வைத்திருப்பவர்கள், வரும் 30ம் தேதிக்குள், கூடுதல் கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், பணம் செலுத்தும் மையத்தில், கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக, மாதாந்திர அட்டையை வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க வரும் போது, கூடுதல் தொகையை வசூலித்து வந்தனர். தற்போது, திடீரென நான்கு நாட்களுக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளதால், மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஆவின் நிர்வாகம், காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூடுதல் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதாக, வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அது பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.டிசம்பர் 16ம் தேதி முதல், அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதிக்கு வழங்கப்படும் பால் அட்டை, புதிய விலையில் வழங்கப்படும் என்பதால், அதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|