இந்தியாவில் பால் உற்பத்தி 121.7 மில்லியன் டன்னாக உயர்வுஇந்தியாவில் பால் உற்பத்தி 121.7 மில்லியன் டன்னாக உயர்வு ... ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உற்பத்தி 2 சதவீதம் அதிகரிப்பு ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உற்பத்தி 2 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்புதிய தயாரிப்புகள் மூலம் சந்தை பங்களிப்பை உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2011
00:03

- வீ.அரிகரசுதன் -ஆறு மாத குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை, விரும்பி உண்ணும் உணவாக பிஸ்கட் உள்ளது. அதுவும், பிரிட்டானியா பிஸ்கட் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு நம்மூர் மக்களிடத்தில், பிரிட்டானியா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.இந்நிறுவனம், மூன்று முதல், 15 வயதினருக்கு பிடித்தமான கிரீம் பிஸ்கட், 20 முதல், 50 வயதினர் விரும்பும், மில்க் மற்றும் மேரி பிஸ்கட் என, அனைத்து வயதினருக்கும் ஏற்ற பிஸ்கட் வகைகளை கொண்டுள்ளது. இவைதவிர, புதிய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அவ்வப்போது புதிய பிஸ்கட் வகைகளையும் அறிமுகம் செய்து வருகிறது.கடந்த 1915ம் ஆண்டில், கொல்கத்தாவில், வெறும், 295 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், தற்போது, 4,500 கோடி ரூபாய்க்கும் மேல் விற்றுமுதலைக் கண்டு வரும் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) அனுராதா நரசிம்மன், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியின் சாராம்சம்:கடந்த 2007ம் ஆண்டுக்கு முன்பு வரை, எண்ணெய், சோப், தேயிலை ஆகியவையே, நாள்தோறும் அதிகம் விற்பனையாகும் பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தற்போது, இந்த இடத்தை பிஸ்கட் கைப்பற்றி உள்ளது.நாட்டில், பிஸ்கட் வர்த்தகத்தின் சந்தை மதிப்பு, 15 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், நிறுவனத்தின் பங்களிப்பு, 33 முதல், 34 சதவீதமாகும். அடுத்து, பார்லே பிஸ்கட்ஸ் நிறுவனம், 30 முதல் ,33 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.இதையடுத்து, ஐ.டி.சி.(சன்பீஸ்ட் ) மற்றும் அமைப்பு சாராத நிறுவனங்கள் (உள்ளூர் பட்டர் பிஸ்கட் உள்ளிட்டவற்றை தயாரிப்பவை) முறையே, 9 சதவீதம் மற்றும் 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இந்தியாவில், பிஸ்கட் வர்த்தகம், ஆண்டுதோறும், 20 சதவீதம் என்றளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.மக்களிடத்தில், நிறுவனத்தின் தயாரிப்புகளான, மேரி கோல்டு, மில்க் பிக்கிஸ், "குட்டே' என்ற பெயரில் கேஷ்யூ, பட்டர், பிஸ்தா,பாதாம், சாக்கோ நட்ஸ் மற்றும் சிப்ஸ் உள்ளிட்டவற்றுக்கு, அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதுதவிர,"டிரீட்' என்ற பெயரில், ஆரஞ்”, மேங்கோ, போர்பன், ஜிம்ஜாம் போன்ற கிரீம் பிஸ்கட்டுகளுக்கும், டைம்பாஸ், 50-50, மஸ்கா சஸ்கா, நியூட்ரிசாய்ஸ் என்ற பெயரில் டைஜஸ்டீவ், கிரீம் கிரேக்கர், அரூட் உள்ளிட்ட பிஸ்கட்கள் என, அனைத்து தயாரிப்புகளுக்கும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.இதுதவிர, பால் மற்றும் பால் பொருட்கள், ரஸ்க், பிரட், கேக், சாக்கோ டெக்கர் என்ற பெயரில் சாக்லேட் உள்ளிட்ட, 300 வகையான பொருட்கள் நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.நிறுவனத்திற்கு, தமிழகத்தில், எட்டு தொழிற்சாலைகள் மற்றும் புதுச்சேரியில், ஒரு தொழிற்சாலை என, நாடு முழுவதும், 70 தொழிற்சாலைகள் உள்ளன. இதுதவிர, அனைத்து மாநிலங்களிலும் கிடங்கு வசதிகள் உள்ளன.நாடு முழுவதும், நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள, 2,500 வினியோகஸ்தர்கள் மூலம், 8.50 லட்சம் கடைகளுக்கு, நிறுவனத்தின் தயாரிப்புகள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், நாட்டின் அனைத்து நகரங்களிலும், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகளில், நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கின்றன.தற்போது, நிறுவனம், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை தயாரிப்பதற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், ராகி, ஓட்ஸ், 5 கிரெய்ன் உள்ளிட்ட அதிக ஊட்டச் சத்து நிறைந்த பிஸ்கட்கள் மற்றும் ஆரோக்கிய குளிர்பானங்கள் போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.நிறுவனம் சமீபத்திய புதிய வரவான, ஓட்ஸ் உணவு பொருளும், இதை மையமாக வைத்து தான் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனத்தின் அனைத்து புதிய தயாரிப்புகளும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும். பிஸ்கட் வர்த்தகத்தில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு அதிகளவில் உயரும். இவ்வாறு அனுராதா கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)