பதிவு செய்த நாள்
12 டிச2011
10:48
ஆனைமலை : ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் சப்போட்டா அறுவடை தொடங்கியுள்ளது. ஆனைமலை சுற்றுப்பகுதிகள் ஆழியாற்று பாசன விவசாயிகள் அதிக அளவில் தென்னை விவசாயம் செய்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே சப்போட்டா விவசாயம் செய்துள்ளனர். ஆனைமலை ஒன்றியத்தில் மொத்தமாகவே சப்போட்டா விவசாயம் 10 ஏக்கர் அளவில் மட்டுமே உள்ளது. ஏக்கருக்கு 100 செடிகள் மூலம் 3 ஆயிரம் கிலோ வரை உற்பத்தி இருக்கும். பூப்பூக்க தொடங்கிய 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். விவசாயிகள் கூறியதாவது: சப்போட்டா பழங்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் அதிக அளவில் பயிரிடுவதில்லை. சப்போட்டா செடிகளுக்கு பயிரிட எந்தவித மானியமும் கிடைப்பதில்லை. தோட்டத்திற்குள் வந்து கிலோவிற்கு 8 ரூபாய் கொடுத்து வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். இந்த விலை கட்டுப்படி ஆவதில்லை என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|