வெள்ளி இறக்குமதி 1,600 டன்னாக குறையும்வெள்ளி இறக்குமதி 1,600 டன்னாக குறையும் ... இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு ...
வந்துவிட்டது திருமண இன்சூரன்ஸ்: விருந்து விஷமானால் இழப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2011
09:32

புதுடில்லி : திருமண விருந்தின் போது உணவு விஷமாகி, உறவினர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு கோரும் வகையில், இன்சூரன்ஸ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்பட்டாலும், இதற்காக, சாமானிய மக்களும், பல லட்ச ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கிடையே கூடி வரும் திருமணம், கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் தடைபட்டு, ஏராளமான பணம் வீணாக நேரிடுகிறது. இந்த சிரமத்தை போக்க, "ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்ட்' நிறுவனமும், "பஜாஜ் அலையன்ஸ்' நிறுவனமும், திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
நான்கு வகை பிரிவுகளில், இன்சூரன்ஸ் செய்வோருக்கு, இரண்டு லட்சம், நான்கு லட்சம், ஆறு லட்சம் மற்றும் எட்டு லட்ச ரூபாய் வரை, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்காக, 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, பிரீமியம் செலுத்த வேண்டும். தீ விபத்து மற்றும் வேறு வகையான விபத்துகள், கொள்ளை, திருட்டு ஆகிய காரணங்களால், திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு வழங்கப்படும். திருமண விருந்தின் போது, உணவு விஷமாகி விருந்தினர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் கூட, இழப்பீடு பெற இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் வழி செய்கின்றன. சில மரணங்களாலோ, மணமக்கள் காயம் பட்டு, அதனால் திருமணம் தடை பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ, இழப்பீடு பெற முடியும். ஆனால், மணமக்களுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட முறையிலான கருத்து வேறுபாட்டால் திருமணம் தடைபட்டால், இந்த இழப்பீடு பொருந்தாது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)