பதிவு செய்த நாள்
12 ஜன2012
03:16
சென்னை:பெங்களூரைச் சேர்ந்த பிரெஸ்டீஜ் குழுமம், கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பு சந்தையில் முதன்முதலாக கால் பதித்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான இப்ரான் ரசாக் கூறியதாவது:
சென்னையில் தரமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதை உணர்ந்து "பெல்லா விஸ்டா' என்ற நவீன வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை துவங்கியுள்ளோம். ரத்தா குழுமத்துடன் இணைந்து இப்புதிய திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.இத்திட்டம், சென்னையை அடுத்த போரூரில், 25.18 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
நவீன வாழ்க்கை முறைக்கு தேவையான, பூங்காக்கள், உடற்பயிற்சி கூடம், பனைமரங்களுடன் கூடிய பசுமை தோட்டங்கள், சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இக்குடியிருப்பு திட்டத்தில் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும், இயற்கையான வெளிச்சம்மற்றும் தாரளமான காற்றோட்டம் வரும் வகையில் கட்டப்பட உள்ளது. பெல்லா விஸ்டா அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்படும் ஒவ்வொரு வீடும், வாஸ்து முறைப்படி அமைய உள்ளது என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பு.
850 கோடி ரூபாய் திட்ட செலவில், 20 டவர்கள், 33 பிளாக்குகள் மற்றும் 16 மாடிகள் கொண்ட இக்குடியிருப்பு திட்டத்தில்,மொத்தம் 2,613 வீடுகள் அமைய உள்ளன. தரைத்தளத்திற்கு கீழ், இரண்டு அடுக்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி இடம்பெறும். ஒரு படுக்கை அறை 600 சதுர அடியிலும், இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கை அறைகள் முறையே, 1,340 சதுர அடி, 1,790 சதுர அடி, 2,277 சதுர அடியில் அமைய உள்ளன. இவ்வீட்டு மனைகளின் விலை சதுர அடிக்கு, 4,200 ரூபாய்.இத்திட்டம், வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு இப்ரான் ரசாக் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|