பதிவு செய்த நாள்
13 ஜன2012
00:35

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலகின் ஒரு சில பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, பரஸ்பர நிதி நிறுவனங்களும், சில்லரை முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பனை செய்ததால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு, பொறியியல் ஆகிய துறைகளைச் நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், மின்சாரம், வங்கி, உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 138.35 புள்ளிகள் சரிவடைந்து, 16,037.51 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 16,178.58 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,962.59 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 29.70 புள்ளிகள் குறைந்து, 4,831.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,869.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,803.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|