பதிவு செய்த நாள்
19 ஜன2012
01:42
சென்னை:ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும், ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனம், சென்னையில் புதிதாக இரண்டு சொகுசு குடியிருப்பு திட்டங்களை துவக்கியுள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜே.சி.சர்மா கூறியதாவது:
ஷோபா மெரிட்டா' மற்றும் "ஷோபா செரீன்' என்ற இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் மூலம் சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் முதன் முறையாக களமிறங்கியுள்ளோம். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) கேளம்பாக்கத்தில், 300 கோடி ரூபாய் திட்ட செலவில், 6 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள "ஷோபா மெரிட்டா' குடியிருப்பு திட்டத்தில், 5 பிளாக்குகளில் மொத்தம் 556 ஆடம்பர வீடுகள் அமைய உள்ளன.
இதில், கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பூங்காக்கள், டென்னிஸ் மைதானம், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும். சதுர அடி 3,800 ரூபாய் என்ற அடிப்படையில், இதில் இடம்பெறும் குடியிருப்புகளின் விலை 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இத்திட்டம் வரும் 2015ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்.
போரூர் அருகில், 120 கோடி ரூபாய் திட்ட செலவில், 3.15 ஏக்கர் நிலப்பரப்பில், "ஷோபா செரீன்' என்ற குடியிருப்பு திட்டம் அமைய உள்ளது. இங்கு மொத்தம் 8 பிளாக்குகளில், 176 ஆடம்பர வீடுகள் கட்டப்படும். சதுர அடி 4,600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இக்குடியிருப்புகளின் விலை, 24-78 லட்சம் ரூபாயாக இருக்கும். இவ்வாறு சர்மா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|