தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ... சர்வதேச காபி பயன்பாடு உயர்வு சர்வதேச காபி பயன்பாடு உயர்வு ...
ஷோபா டெவலப்பர்ஸ் சென்னையில் ரூ.420 கோடியில் சொகுசு குடியிருப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2012
01:42

சென்னை:ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும், ஷோபா டெவலப்பர்ஸ் நிறுவனம், சென்னையில் புதிதாக இரண்டு சொகுசு குடியிருப்பு திட்டங்களை துவக்கியுள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜே.சி.சர்மா கூறியதாவது:
ஷோபா மெரிட்டா' மற்றும் "ஷோபா செரீன்' என்ற இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின் மூலம் சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் முதன் முறையாக களமிறங்கியுள்ளோம். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) கேளம்பாக்கத்தில், 300 கோடி ரூபாய் திட்ட செலவில், 6 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள "ஷோபா மெரிட்டா' குடியிருப்பு திட்டத்தில், 5 பிளாக்குகளில் மொத்தம் 556 ஆடம்பர வீடுகள் அமைய உள்ளன.
இதில், கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பூங்காக்கள், டென்னிஸ் மைதானம், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும். சதுர அடி 3,800 ரூபாய் என்ற அடிப்படையில், இதில் இடம்பெறும் குடியிருப்புகளின் விலை 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இத்திட்டம் வரும் 2015ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்.
போரூர் அருகில், 120 கோடி ரூபாய் திட்ட செலவில், 3.15 ஏக்கர் நிலப்பரப்பில், "ஷோபா செரீன்' என்ற குடியிருப்பு திட்டம் அமைய உள்ளது. இங்கு மொத்தம் 8 பிளாக்குகளில், 176 ஆடம்பர வீடுகள் கட்டப்படும். சதுர அடி 4,600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இக்குடியிருப்புகளின் விலை, 24-78 லட்சம் ரூபாயாக இருக்கும். இவ்வாறு சர்மா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)