பதிவு செய்த நாள்
20 ஜன2012
01:00
வெளிநாடு வாழ் இந்தியர்களின் என்.ஆர்.இ., டெபாசிட்டுகளில் செய்யப்படும் முதலீடு அதிகரித்துள்ளதால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.கடந்தாண்டு ஜூன் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சராசரியாக 20 சதவீதம் சரிவடைந்தது.
இதையடுத்து,வெளிநாடு வாழ் இந்தியர்களின் என்.ஆர்.இ., டெபாசிட்டிற்கான வட்டி விகித கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியது. டாலர் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், வங்கிகள், என்.ஆர்.இ., டெபாசிட்டுகளுக்கான வட்டியை 9 - 9.5 சதவீதம் வரை உயர்த்தின.
இதனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதிக அளவில், இந்திய வங்கிகளில் உள்ள அவர்களுடைய என்.ஆர்.இ., சேமிப்பு கணக்குகளில் அதிகளவு முதலீடு மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். சென்ற நவம்பர் மாத நிலவரப்படி, என்.ஆர்.இ., வங்கி கணக்குகளில், 2,600 கோடி ரூபாய் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த வகையில் அமெரிக்க டாலரின் புழக்கம் அதிகரித்துள்ளதால், சரிவடைந்து வந்த ரூபாயின் வெளிமதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. சென்ற புதன் அன்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 0.7 சதவீதம் உயர்ந்து 50.42 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று, இது 50.24 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|