தங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.536 உயர்வுதங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.536 உயர்வு ... உணவுப் பொருள் பணவீக்கம் மைனஸ் 1.03 சதவீதம் உணவுப் பொருள் பணவீக்கம் மைனஸ் 1.03 சதவீதம் ...
உணவு சாரா கடன் 17 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2012
02:14

மும்பை:ஜனவரி 13ம் தேதியுடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய உணவு சாராத கடன் 17.1 சதவீதம் அதிகரித்து, 44.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 38.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, உணவு சாராத துறைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன், ஆண்டுக் கணக்கில் 18 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வந்தது. ஆனால், பொருளாதார தேக்க நிலையால் இந்த வளர்ச்சி குறைந்து போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த இரண்டாண்டுகளாக நாட்டின் பணவீக்கம் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததால், ரிசர்வ் வங்கி, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2011ம் ஆண்டு இறுதி வரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை, 13 தடவைகளில் 3.50 சதவீதம் உயர்த்தியது. இதனால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்தது. இதன் காரணமாக, வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது மிகவும் குறைந்து போனது.
இதற்கிடையே நடப்பு ஜனவரி 13ம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், கடந்தாண்டின் இதே காலத்தை விட 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 50.92 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 59.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், உணவு சாரா துறைக்கான வங்கிக் கடன் வளர்ச்சி,17-18 சதவீதம் என்ற அளவில் இருக்குமென ரிசர்வ் வங்கி, முதலில் மதிப்பீடு செய்திருந்தது. ஆனால், வட்டி செலவினம் அதிகரிப்பால், இத்துறைக்கான கடன் வளர்ச்சி 16 சதவீதம் என்ற அளவில்தான் இருக்குமென மறுமதிப்பீட்டில் தெரிவித்திருந்தது.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், வங்கிகள் வழங்கிய கடன்கள் 21.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. இதே நிதியாண்டில், திரட்டப்பட்ட டெபாசிட் வளர்ச்சி 15.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால், நிறுவனங்களின் வளர்ச்சி திட்டங்கள் பாதிப்புக்குள்ளானதுடன், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 9 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6.9 சதவீதமாக குறைந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)