பதிவு செய்த நாள்
03 பிப்2012
14:20
மும்பை: நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல் - டிசம்பர்) இந்தியாவின் வைரங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 11.65 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்க பொருளாதார மந்தநிலை, ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட கலவரம் போன்ற காரணங்களால் கடந்த 2011ம் ஆண்டில் வைரங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் வைரங்கள் இறக்குமதியில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவில், இந்திய வைரங்களுக்கான தேவைப்பாடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜப்பானில், இந்தியாவின் உயர் தர வைரங்களின் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக வைரங்கள் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மேஹுல் சோக்ஷி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|