பதிவு செய்த நாள்
20 பிப்2012
00:07
தேனி: விவசாயிகளுக்கான தானிய ஈட்டுக்கடன் அதிகரிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உரிய காலத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காலங்களில், அவற்றை கூட்டுறவு சங்க கிட்டங்கிகளில் சேமித்து வைக்க, கிட்டங்கி வசதிகள் உள்ளன. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தானியங்களின் ஈட்டின் பேரில் விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடன் வழங்கப்படுகிறது.கடந்த காலங்களில், அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 2 லட்சம் வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டது. தற்போது 3 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தானியங்களின் மதிப்பில் 60 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 12 முதல் 14 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால், தானியங்களின் மீது அதிக அளவில் கடன் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|