மும்பை ஏர்போர்ட் இன்று மூடல்மும்பை ஏர்போர்ட் இன்று மூடல் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெளிநாடுகளில் இருந்து பணப் பரிமாற்றம்:கரூர் வைஸ்யா வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
12:45

சென்னை:கரூர் வைஸ்யா வங்கி, உலகின் முன்னணி பணப் பரிவர்த்தனை நிறுவனமான, "எக்ஸ்பிரஸ் மணி'யுடன் இணைந்து, வெளிநாடுகளில் இருந்து, வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது."எக்ஸ்பிரஸ் மணி' பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்கு, 125 நாடுகளில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் மையங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டில் வசிக்கும் ஒருவருக்கு, பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இந்த மையங்களில் ஏதாவது ஒரு மையத்தில், யாருக்கு அனுப்ப வேண்டுமோ, அவரது பெயரில், பணத்தை, "டிபாசிட்' செய்தால், அவருக்கு, 16 இலக்க ரகசிய எண் வழங்கப்படும். அதன் பின், பணம் பெறுபவர்களுக்கு, இந்த ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டும்.
அவர்கள், கரூர் வைஸ்யா வங்கியை அணுகி, குறிப்பிட்ட ரகசிய எண்ணையும், தாங்கள்தான் குறிப்பிட்ட நபர் என்பதற்கான சான்றிதழையும் காட்டினால், உடனடியாக வங்கி கிளையில் இருந்து, அவர்களுக்கு தொகை வழங்கப்படும். இந்த வசதி மூலம், ஒரு நிமிட இடைவெளியில், பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.
வங்கியில் கணக்கு வைக்காத பொதுமக்கள் கூட, இந்த வசதியை பயன்படுத்தி, பணப் பரிமாற்றம் செய்யலாம். கரூர் வைஸ்யா வங்கி - "எக்ஸ்பிரஸ் மணி' நிறுவனத்திற்கு இடையே, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.நிகழ்ச்சியில் பேசிய, "எக்ஸ்பிரஸ் மணி' நிறுவனத்தின், தெற்காசிய வணிக மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அரவிந்த் மைலர், ""வெளிநாடுகளில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யும் நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது. தங்களது பணத்தை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்ய, வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். புகழ்பெற்ற நிதி அமைப்பான கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து, இந்த சேவையை அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்,'' என்றார்.
கரூர் வைஸ்யா வங்கியின், சர்வதேச பிரிவு பொது மேலாளர் பாஸ்கர் பேசும்போது, ""வாடிக்கையாளரின் வசதிக்காக பல்வேறு புதிய சேவைகளை, நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த ஒப்பந்தம் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து வேகமாகவும், பாதுகாப்பாகவும் வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்,'' என்றார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)