பதிவு செய்த நாள்
25 பிப்2012
12:45
சென்னை:கரூர் வைஸ்யா வங்கி, உலகின் முன்னணி பணப் பரிவர்த்தனை நிறுவனமான, "எக்ஸ்பிரஸ் மணி'யுடன் இணைந்து, வெளிநாடுகளில் இருந்து, வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது."எக்ஸ்பிரஸ் மணி' பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்கு, 125 நாடுகளில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் மையங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டில் வசிக்கும் ஒருவருக்கு, பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இந்த மையங்களில் ஏதாவது ஒரு மையத்தில், யாருக்கு அனுப்ப வேண்டுமோ, அவரது பெயரில், பணத்தை, "டிபாசிட்' செய்தால், அவருக்கு, 16 இலக்க ரகசிய எண் வழங்கப்படும். அதன் பின், பணம் பெறுபவர்களுக்கு, இந்த ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டும்.
அவர்கள், கரூர் வைஸ்யா வங்கியை அணுகி, குறிப்பிட்ட ரகசிய எண்ணையும், தாங்கள்தான் குறிப்பிட்ட நபர் என்பதற்கான சான்றிதழையும் காட்டினால், உடனடியாக வங்கி கிளையில் இருந்து, அவர்களுக்கு தொகை வழங்கப்படும். இந்த வசதி மூலம், ஒரு நிமிட இடைவெளியில், பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.
வங்கியில் கணக்கு வைக்காத பொதுமக்கள் கூட, இந்த வசதியை பயன்படுத்தி, பணப் பரிமாற்றம் செய்யலாம். கரூர் வைஸ்யா வங்கி - "எக்ஸ்பிரஸ் மணி' நிறுவனத்திற்கு இடையே, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.நிகழ்ச்சியில் பேசிய, "எக்ஸ்பிரஸ் மணி' நிறுவனத்தின், தெற்காசிய வணிக மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அரவிந்த் மைலர், ""வெளிநாடுகளில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யும் நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது. தங்களது பணத்தை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்ய, வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். புகழ்பெற்ற நிதி அமைப்பான கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்து, இந்த சேவையை அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்,'' என்றார்.
கரூர் வைஸ்யா வங்கியின், சர்வதேச பிரிவு பொது மேலாளர் பாஸ்கர் பேசும்போது, ""வாடிக்கையாளரின் வசதிக்காக பல்வேறு புதிய சேவைகளை, நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த ஒப்பந்தம் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து வேகமாகவும், பாதுகாப்பாகவும் வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்,'' என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|