பதிவு செய்த நாள்
29 மார்2012
10:04
வாடிப்பட்டி : மதுரையில் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், வாடிப்பட்டியில் விறகு விலை இருமடங்கு அதிகரித்தது.காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்கால், கடந்த ஜனவரி முதல் சிலிண்டர் சப்ளை முறையாக இல்லை. பதிவு செய்தவர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிலிண்டர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வாடிப்பட்டியில் இந்துஸ்தான் பெட்ரோலியம்(எச்.பி.), இன்டேன் நிறுவன சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டன. எனினும், எச்.பி.,யில் பதிவு செய்து இரண்டு மாதம் கடந்த நிலையிலும் சிலிண்டர் வழங்கவில்லை. இங்கு புதிதாக சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு அடுப்பு மட்டும் வழங்கியுள்ளனர். சிலிண்டர் வழங்கவில்லை. இதனால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த விரும்பினாலும், வெளிமார்க்கெட்டில் லிட்டர் ரூ.60 வரை விற்கப்படுகிறது. பொதுமக்கள் வாங்க தயாராக இருந்தாலும் தேவையான அளவு கிடைக்கவில்லை. எனவே, விறகுகளை பயன்படுத்துகின்றனர். இருபது கிலோ எடையுள்ள ஒரு தூக்கு கருவேல விறகு தற்போது ஒரு தூக்கு விறகு ரூ.120க்கு விற்கப்படுகிறது. மற்ற விறகுகள் தூக்கு ஒன்றுக்கு ரூ.150 வரை விற்கப்படுகிறது. அதிக விலை கொடுத்து விறகு வாங்க இயலாதவர் வனப்பகுதியில் விறகு சேகரிக்கின்றனர். வாடிப்பட்டியில் காஸ் தட்டுப்பாட்டை நீக்கி முறையாக வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|