பதிவு செய்த நாள்
04 ஏப்2012
00:00
புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த பெல் நிறுவனம், இரண்டாவது பங்கு வெளியீட்டு திட்டத்தை திடீரென வாபஸ் பெற்றுள்ளது.பெல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் மிகுமின் கழகம், கடந்த அக்டோபர் மாதம் "செபி'யிடம் இரண்டாவது பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரும் ஆவணங்களை (டீ.ஆர்.எச்.பி) அளித்தது. இதையடுத்து இப்பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.இதன்படி 10 ரூபாய் முகமதிப்பில், 2 கோடியே 44 லட்சத்து 76 ஆயிரம் பங்குகளை வெளியிட பெல் திட்டமிட்டிருந்தது. பங்கின் உயர்மதிப்பு, பங்கு வெளியீட்டின் போது நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், திடீரென்று "செபி'யிடம் இருந்து பங்கு வெளியீடு தொடர்பான ஆவணங்களை பெல் திரும்ப பெற்றுக் கொண்டது. இது குறித்து, இந்நிறுவனம், தேசிய பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், மத்திய கனரக தொழில்கள் மற்றும் பங்கு விலக்கல் துறையின் அனுமதியின் பேரில், பங்கு வெளியீட்டு ஆவணங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|