ஏர் இந்தியாவிற்கு 80,000 டாலர் அபராதம்ஏர் இந்தியாவிற்கு 80,000 டாலர் அபராதம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்தது ...
உழவர் சந்தையில் ஆண்டுக்கு ரூ.24 கோடி காய்கறி விற்று சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
13:28

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தையில் கடந்த நிதியாண்டில் 24 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த அளவில், ஈரோட்டில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஐந்து இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு நேரடியாக எடுத்து வந்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்காமல், நேரடியாக மக்களுக்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.காய்கறி குறைந்த விலையில் கிடைப்பதால், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் உழவர் சந்தைக்கு வருபவர்கள் எண்ணிக்கை பத்து சதவீதம் அதிகரித்துள்ளது.
வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:
கடந்த 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் வரை, ஓராண்டில் மட்டும், ஐந்து உழவர் சந்தைகளில் 24 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. ஈரோடு சம்பத் நகரில், 7,425 மெட்ரிக் டன் காய்கறி - 10.23 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. பெரியார் நகரில் 2,267 மெட்ரிக் டன் காய்கறி - 3.44 கோடி, கோபியில் 2,842 மெட்ரிக் டன் காய்கறி - 3.88 கோடி, சத்தியில் 2,973 மெட்ரிக் டன் காய்கறி - 4.21 கோடி, பெருந்துறையில் 1,568 மெட்ரிக் டன் காய்கறி - 2.31 கோடி ரூபாய் என, 24.07 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.நேற்று முன்தினம் சம்பத் நகரில் 20 டன் காய்கறி - 14 லட்சம், பெரியார் நகரில் 6.5 டன் காய்கறி - 5 லட்சம், பெருந்துறையில் 4.5 டன் காய்கறி - 70 ஆயிரம், கோபியில் 7.5 டன் காய்கறி - ஒரு லட்சம், சத்தியில் 7.7 டன் காய்கறி - 1.27 லட்சத்துக்கும் விற்பனை நடந்துள்ளது. குறைந்த விலையில் காய்கறி கிடைப்பதால், அதிகளவில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)