பதிவு செய்த நாள்
05 மே2012
01:07
புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், யூரியா உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என, மத்திய உரங்கள் மற்றும் ரசாயன அமைச்சகம் தெரிவித்துள்ளது.சென்ற மார்ச் மாதத்தில், 18.93 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதன் உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 9 சதவீதம் குறைந்து, 17.28 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், 3.03 லட்சம் டன், டை- அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி.)உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி, 3.10 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஆக, டை- அமோனியம் பாஸ்பேட், 7,000 டன் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.கடந்த, மார்ச் 31ம் தேதி வரையிலுமாக, யூரியா விற்பனை, 1.51 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 3.15 சதவீதம் (1.56 கோடி டன்) குறைவாகும்.சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பல மாநிலங்களுக்கு, 21.22 லட்சம் டன் யூரியா அனுப்பட்டது. பற்றாக்குறை ஏற்படாத வகையில், 24.94 லட்சம் டன் யூரியா கையிருப்பில் உள்ளது.இதே மாதங்களில், டை-அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி) மற்றும் முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஒ.பி.) கையிருப்பு, முறையே, 18.56 லட்சம் டன் மற்றும் 7.28 லட்சம் டன் என்றளவில் உள்ளது.ஓமன் நாட்டிலிருந்து, 1.59 லட்சம் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டி.ஏ.பி.(25 ஆயிரம் டன்), எம்.ஒ.பி.(1.18 லட்சம் டன்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|