சென்ற 2011-12ம் நிதியாண்டில்...இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 39 சதவீதம் அதிகரிப்புசென்ற 2011-12ம் நிதியாண்டில்...இந்திய நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன் 39 ... ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ...
நடப்பு ஆண்டும் புதிய பங்கு வெளியீடுகளில்...முதலீட்டாளர்களின் பணம் மாயமாகும் அவலம் தொடர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2012
00:32

சென்ற ஆண்டைப் போல், நடப்பாண்டும் பெரும்பாலான புதிய பங்கு வெளியீடுகளில் முதலீட்டாளர்களின் பணம் காற்றில் கரைந்த கற்பூரம் போல் மாயமாகியுள்ளது.சர்வதேச நெருக்கடியால், கடந்த ஆண்டு முழுவதும் இந்திய பங்குச் சந்தை சுணக்க நிலையில் இருந்தது. இதனால், பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ளும் திட்டத்தை தள்ளி வைத்தன. 'செபி' யிடம் அனுமதி பெற்றும், பல நிறுவனங்களால் புதிய பங்குகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்கள்:மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே திரட்ட முடிந்தது.இந்த நிலையிலும், பல நிறுவனங்கள் சிறிய முதலீட்டாளர்களின் மீது கொண்ட நம்பிக்கையால் புதிய பங்கு வெளியீடுகளை துணிச்சலுடன் மேற்கொண்டன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நாளன்றே, பல மடங்கு சரிவடைந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்தன.ஆர்.டீ.பீ. ரசாயன்ஸ், தக்ஷீல் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள், அவற்றின் வெளியீட்டு விலையை விட பல மடங்கு குறைந்து போனது. இதனால், லட்சக்கணக்கான சிறிய முதலீட்டாளர்கள் பல கோடிகளை இழந்தனர்.
இந்நிலையில், நடப்பாண்டு தொடக்கத்தில், பங்குச் சந்தையில் எழுச்சி கண்டது. இதனால் பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள தயாராயின. ஆனால், சர்வதேச நெருக்கடி காரணமாக, அடுத்து வந்த மாதங்களில் பங்குச் சந்தை சுணக்கம் கண்டது. இதையடுத்து, பங்கு வெளியீடுகளை பல நிறுவனங்கள் ஒத்தி வைத்தன.
எம்.சி.எக்ஸ்:இந்நிலையில், நல்ல நிதி ஆதாரம் கொண்ட எம்.சி.எக்ஸ் நிறுவனம், சென்ற பிப்ரவரியில், இவ்வாண்டின் முதல் பங்கு வெளியீட்டை தொடங்கி வைத்தது. இவ்வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
இதன் பங்கின் விலை 1,032 ருபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளன்று இப்பங்கின் விலை, வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 1,450 ரூபாய் வரை விலை போனது. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், தற்போது, இப்பங்கு, அதன் வெளியீட்டு விலையை விட 12 ரூபாய் குறைந்து 1,020 ரூபாய்க்கு விலை போய் கொண்டிருக்கிறது.சிறப்பான நிதியாதாரத்தை கொண்ட எம்.சி.எக்ஸ்., நிறுவனத்தின் பங்குகளுக்கே இந்த நிலை என்றால், நடுத்தர நிறுவனங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை.
நடப்பாண்டில் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்ட, ஐந்து நிறுவனங்களில், எம்.டி.எஜுகேர் நிறுவனத்தின் பங்கு மட்டுமே, அதன் வெளியீட்டு விலையான, 80 ரூபாயில் இருந்து 16 சதவீதம் உயர்ந்து, 93 ரூபாய் என்ற அளவிற்கு கைமாறிக் கொண்டுள்ளது.இதர நிறுவனங்களான, பொதுத்துறையை சேர்ந்த என்.பீ.சி.சி.யின் பங்கு ஒன்று, அதன் வெளியீட்டு விலையான, 106 ரூபாயில் இருந்து 16 சதவீதம் குறைந்து 89 ரூபாய்க்கு விலை போய் கொண்டுள்ளது.
நிம்மதி பெருமூச்சு:அது போன்று, அண்மையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, திரிபோவன்தாஸ் பீம்ஜி சவேரி நிறுவனத்தின் பங்கின் விலையும் சரிவடைந்துள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு, பங்குச் சந்தையில் 120 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இது, தற்போது 7.5 சதவீதம் சரிவடைந்து, 111 ரூபாய்க்கு விலை போய்க் கொண்டுள்ளது. பங்குச் சந்தையில், 30 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட ஒலிம்பிக் கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு, தற்போது, அதே விலையில் ஏற்ற, இறக்கமின்றி காணப்படுகிறது.
இந்த ஐந்து நிறுவன பங்குகளின் நிலை இப்படியிருக்க, இரண்டு நிறுவனங்கள், அவற்றின் பங்கு வெளியீட்டிற்கு போதிய ஆதரவு கிடைக்காததால், இவ்வெளியீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டன. இதனால், இப்பங்குகளுக்கு விண்ணப்பித்த சிறிய முதலீட்டாளர்கள்,'தப்பித்தோம்' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
சம்வர்தனா மதர்சன் :இந்த இரு நிறுவனங்களில், சிறப்பான நிதியாதாரம் மற்றும் பன்னாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சம்வர்தனா மதர்சன் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், 1,665 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு, பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இந்நிறுவனத்தின் பங்குகளுக்கு கூட, முதலீட்டாளர்கள் ஆதரவளிக்கவில்லை.
குறைந்த அளவிற்கே, பங்குகள் வேண்டி விண்ணப்பம் வந்ததால், இந்நிறுவனம் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றுக் கொண்டது. அது போன்று, 62 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த குட்வில் ஹாஸ்பிடல் நிறுவனமும், போதிய முதலீட்டாளர்களின் ஆதரவில்லாததால், பங்கு வெளியீட்டை இடையிலேயே திரும்பப் பெற்றுக் கொண்டது.கடந்த ஆண்டில், பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்து பல கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள், மீண்டும் மூலதனச் சந்தையில் முதலீடு செய்ய தயங்குகின்றனர். அதனால் தான் புதிய பங்கு வெளியீடுகள் தோல்வியடைகின்றன என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)