பதிவு செய்த நாள்
18 மே2012
00:02
மும்பை: நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், உள்நாட்டில் தங்க பயன்பாடு, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 29 சதவீதம் சரிவடைந்து, 207.6 டன்னாக குறைந்துள்ளது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மதிப்பின் அடிப்படையிலும், தங்க பயன்பாடு 3 சதவீதம் குறைந்து, 56 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக இருந்தது.சுணக்க நிலைகடந்த 2011ம் காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டிலும், தங்க பயன்பாடு 19 சதவீதம் குறைந்து 152 டன்னாக இருந்தது. இருப்பினும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட, மதிப்பின் அடிப்படையில், இதன் பயன்பாடு 10 சதவீதம் அதிகரித்து, 41 ஆயிரத்து 480 கோடி ரூபாயாக இருந்தது.சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலை, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வருவது, நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தங்க இறக்குமதி மீதான வரி அதிகரிப்பு மற்றும் உற்பத்தி வரி போன்றவற்றாலும் உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை குறைந்து போனதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும், நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில், தங்கத்திற்கான தேவை கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 5 சதவீதம் குறைந்து 1,097.60 டன்னாக குறைந்துள்ளது. தொழில்துறைசர்வதேச அளவில், தங்க ஆபரணங்கள் தயாரிப்போர் மற்றும் தொழில் துறையினர் குறைந்த அளவே தங்கத்தை வாங்கியுள்ளனர். இதன் காரணமாகவும், இதன் பயன்பாடு குறைந்துள்ளது. இருப்பினும், உலகளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை ஓரளவிற்கு வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.உலகளவில், டாலர் உள்ளிட்ட இதர செலாவணிகளின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களால் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு குறைந்திருந்தது என, உலக தங்க கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|