பதிவு செய்த நாள்
19 ஜூன்2012
16:56
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.97 புள்ளிகள் அதிகரித்து 16859.80 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 39.60புள்ளிகள் அதிகரித்து 5103.85 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதன் மூலம் இந்நதியாவி்ன் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என பிரதமர் மன்மோகன் சிங் ஜி 20 மாநாட்டில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய பங்குசந்தைகளில் நல்ல முன்னேற்றம காணப்பட்டது. எண்ணெய், காஸ், ஐடிசி, ஐசிஐசிஐ, ஹச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகிய நிறுவனப்பங்குகள் நல்ல விலைக்கு கைமாறின. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, சென்செக்ஸ் கணக்கிடப்படும் 30 நிறுவனங்களில் 23 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 7 நிறுவனப்பங்குகள் சரிவிலும் காணப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|