தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்தது   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்தது ... முட்டை விலை 324 காசாக உயர்வு முட்டை விலை 324 காசாக உயர்வு ...
கூட்டாக விலை உயர்த்தியதால்11 சிமென்ட் நிறுவனங்களுக்கு அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
03:21

புதுடில்லி:கூட்டாக செயல்பட்டு, சிமென்ட் உற்பத்தியை குறைத்து, அதன் விலையை செயற்கையாக உயர்த்தி, கொள்ளை லாபம் ஈட்டிய 11 நிறுவனங்களுக்கு, 6,000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2009 மற்றும் 2010ம் ஆண்டில், சிமென்ட் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு, உற்பத்தியை குறைத்து, விலை உயர்வுக்கு வழி வகுத்ததாக, இந்திய கட்டுமான சங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இப்புகாரை விசாரித்த, இந்திய சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் (சி.சி.ஐ.,), 2002ம் ஆண்டு சந்தை போட்டி சட்ட விதியை மீறி செயல்பட்ட, 11 சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் லாபத்தில், 0.5 சதவீத தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ், கிராசிம் சிமென்ட்ஸ், (தற்போது அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் உடன் இணைந்துள்ளது),ஜே.கே.சிமென்ட்ஸ், இந்தியா சிமென்ட்ஸ், மெட்ராஸ் சிமென்ட்ஸ், செஞ்சுரி சிமென்ட்ஸ்,பினானி சிமென்ட்ஸ், லபார்கே இந்தியா மற்றும் ஜேபீ சிமென்ட்ஸ் ஆகிய, 11 நிறுவனங்கள் அனைத்துமாக 6,000 கோடி ரூபாய்க்கும், அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது தவிர, இந்திய சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிமென்ட் நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டு, அத்தியாவசியமான சிமென்ட் விலையை உயர்த்தியதால், நுகர்வோருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)