பதிவு செய்த நாள்
22 ஜூன்2012
03:21
புதுடில்லி:கூட்டாக செயல்பட்டு, சிமென்ட் உற்பத்தியை குறைத்து, அதன் விலையை செயற்கையாக உயர்த்தி, கொள்ளை லாபம் ஈட்டிய 11 நிறுவனங்களுக்கு, 6,000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2009 மற்றும் 2010ம் ஆண்டில், சிமென்ட் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு, உற்பத்தியை குறைத்து, விலை உயர்வுக்கு வழி வகுத்ததாக, இந்திய கட்டுமான சங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இப்புகாரை விசாரித்த, இந்திய சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் (சி.சி.ஐ.,), 2002ம் ஆண்டு சந்தை போட்டி சட்ட விதியை மீறி செயல்பட்ட, 11 சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் லாபத்தில், 0.5 சதவீத தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ், கிராசிம் சிமென்ட்ஸ், (தற்போது அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் உடன் இணைந்துள்ளது),ஜே.கே.சிமென்ட்ஸ், இந்தியா சிமென்ட்ஸ், மெட்ராஸ் சிமென்ட்ஸ், செஞ்சுரி சிமென்ட்ஸ்,பினானி சிமென்ட்ஸ், லபார்கே இந்தியா மற்றும் ஜேபீ சிமென்ட்ஸ் ஆகிய, 11 நிறுவனங்கள் அனைத்துமாக 6,000 கோடி ரூபாய்க்கும், அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது தவிர, இந்திய சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிமென்ட் நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டு, அத்தியாவசியமான சிமென்ட் விலையை உயர்த்தியதால், நுகர்வோருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|