பதிவு செய்த நாள்
27 ஜூன்2012
12:55
மண்டபம்: ஆந்திராவின் "வனாமி' வரத்து அதிகரிப்பால், தமிழகத்தில் இறால் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் ஒரு கிலோ(40 இறால்கள்) ரூ.650க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தடை காலம் முடிந்த பின் கடந்த மாதத்தில் ரூ.550 என்பது தற்போது 400 முதல் 450 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இது குறித்து வியாபாரி வில்சன் கூறியதாவது: இறால்களை கூவி, கூவி விற்கும் சூழல் உள்ளது. ஆந்திராவில் "வனாமி' என அழைக்கப்டும் வெள்ளை நிற இறால்கள் வரத்து அதிகம் உள்ளது. ஒரு கிலோ வனாமி விலை ரூ 100. இதனால் ஏற்றுமதி கம்பெனிகள், தமிழக இறால்களை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி கம்பெனிகளுக்கு, நாளொன்றுக்கு 30 வேன்களில் "வனாமி' இறால் கொண்டு வரப்படுகின்றன. இதன் வரத்து குறைந்தால்தான் நமது இறால்களின் விலை உயர வாய்ப்புள்ளது,என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|