பதிவு செய்த நாள்
27 ஜூலை2012
00:28
ஐதராபாத்:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த, புதிய பிரிமிய வருவாய், 6.4 சதவீதம் அதிகரித்து, 19,451 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 18,283 கோடி ரூபாயாக இருந்தது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில், முன்னணியில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய், 8.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13,341 கோடியிலிருந்து, 14,451 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், தனியார்துறை காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 1.2 சதவீதம் அதிகரித்து, 4,941 கோடியிலிருந்து, 5,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல்காலாண்டில், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த புதிய பிரிமிய வருவாய் 17.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14,063 கோடியிலிருந்து, 16,586 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 19 சதவீதம் உயர்ந்து, 9,581 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், தனியார் துறை நிறுவனங்களின் பொதுக் காப்பீட்டு புதிய பிரிமிய வருவாய் 16.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,020 கோடியிலிருந்து, 7,005 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|