பதிவு செய்த நாள்
05 ஆக2012
09:45
மதுரை : வங்கியில் கூடுதல் வட்டி வசூலிக்கின்றனரா, மறைமுக கட்டணம் விதித்துள்ளனரா... ரிசர்வ் வங்கியின் குறைதீர் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். வாடிக்கையாளர்களை நோக்கி வங்கிகள் வரத்துவங்கி விட்டன. அதேநேரத்தில் பிரச்னைகளும் அதிகரித்து வருகிறது. வங்கிகளில் கணக்கு பரிமாற்றம், வட்டி தொடர்பான பிரச்னை, மறைமுக கட்டணம் போன்ற பிரச்னைகளை, நாள்தோறும் வாடிக்கையாளர்கள் சந்திக்கின்றனர். இதுகுறித்த தெளிவான நடைமுறைகள் இல்லாததால், வங்கி மேலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். வங்கி மேலாளர்களே இப்பிரச்னையை தீர்த்து வைக்க முடியும். தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறுங்கடன் நிறுவனங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் வருகின்றன. வாடிக்கையாளர் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு கண்டிப்பாக கிடைக்க வாய்ப்புள்ளது. பொதுத்துறை அல்லாத பிற நிறுவனங்கள், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை கூடுதல் வட்டி, மறைமுக கட்டணம் தான். நகைக்கடனுக்கு அதிக வட்டி விதிப்பது, வட்டி செலுத்திய பின்னும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது என தொடர்கிறது. சில பொதுத்துறை வங்கிகளில் நகைக்கடன் பெறும் போது, நம்மிடம் பெறும் பணத்திற்கு உரிய ரசீது தருவதில்லை. அந்தப் பணம் எதற்காக கேட்கின்றனர் என்பதையும் தெரிவிப்பதில்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும், முதலில் சம்பந்தப்பட்ட வங்கி அலுவலரிடம், கடிதம் மூலமாக தெரிவிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளரை அணுகலாம். அவரது முகவரி: எஸ். மாடசாமி, வங்கி குறைதீர்ப்பாளர், ரிசர்வ் வங்கி கட்டட வளாகம், 2வது ராஜாஜி ரோடு, சென்னை -1, போன்: 044 - 2539 5964. மெயில்: bochennai@rbi.org.in
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|