ஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜாஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜா ... பூச்சி தாக்குதலால் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி சரிவு பூச்சி தாக்குதலால் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி சரிவு ...
பொது துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் நவம்பரில் ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2012
01:03

புதுடில்லி:வரும் நவம்பர் மாதம், ஆயில் இந்தியா, என்.எல்.சி., ஆகிய இரு நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், நிர்ணயிக்கப்பட்ட பங்கு விற்பனை மூலம், 10 ஆயிரம் கோடி திரட்டப்படும் என, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில், முதற் கட்டமாக, ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் (ஆர்.ஐ.என்.எல்.,) நிறுவனம், நடப்பு அக்டோபர் இறுதியில், பங்கு வெளியீடு மேற்கொண்டு, 10 சதவீத பங்கு விற்பனை மூலம் 2,500 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்நிறுவனம், முதல் முறையாக, பங்கு வெளியீட்டில் களம் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பரில், நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (என்.எம். டீ.சி.,), நிறுவனத்தின் 10 சதவீத பங்கு விற்பனை மூலம், 7,675 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், இதே மாதத்தில், நேஷனல் அலுமினியம் கம்பெனி (நால்கோ) நிறுவனம், 12.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 1,650 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்த இரண்டு பங்கு வெளியீடுகள் வாயிலாக மொத்தம், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என, தெரிகிறது.மத்திய அரசு, அதன் மொத்த பங்கு வெளியீட்டு இலக்கில், நடப்புஆண்டு இறுதிக்குள் 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)