பதிவு செய்த நாள்
03 அக்2012
01:03
புதுடில்லி:வரும் நவம்பர் மாதம், ஆயில் இந்தியா, என்.எல்.சி., ஆகிய இரு நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், நிர்ணயிக்கப்பட்ட பங்கு விற்பனை மூலம், 10 ஆயிரம் கோடி திரட்டப்படும் என, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில், முதற் கட்டமாக, ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் (ஆர்.ஐ.என்.எல்.,) நிறுவனம், நடப்பு அக்டோபர் இறுதியில், பங்கு வெளியீடு மேற்கொண்டு, 10 சதவீத பங்கு விற்பனை மூலம் 2,500 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்நிறுவனம், முதல் முறையாக, பங்கு வெளியீட்டில் களம் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பரில், நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (என்.எம். டீ.சி.,), நிறுவனத்தின் 10 சதவீத பங்கு விற்பனை மூலம், 7,675 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், இதே மாதத்தில், நேஷனல் அலுமினியம் கம்பெனி (நால்கோ) நிறுவனம், 12.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 1,650 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்த இரண்டு பங்கு வெளியீடுகள் வாயிலாக மொத்தம், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என, தெரிகிறது.மத்திய அரசு, அதன் மொத்த பங்கு வெளியீட்டு இலக்கில், நடப்புஆண்டு இறுதிக்குள் 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|