பதிவு செய்த நாள்
13 அக்2012
12:39
மும்பை: ரூபாய்க்கான குறியீட்டுடன், புதிதாக, 50 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிட, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படும், ரூபாய் நோட்டுகளில், அதிக பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. உண்மையான ரூபாய் நோட்டுகளில் இருந்து, கள்ள நோட்டுகளை வேறுபடுத்தி காட்ட, இந்த பாதுகாப்பு அம்சங்கள் உதவியாக இருக்கும். இந்த உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன், புதிதாக, 50 ரூபாய் நோட்டுக்களும் அச்சிட்டு வெளியிடப்பட உள்ளன. இந்த, 50 ரூபாய் நோட்டுக்களில், ரூபாய்க்கான குறியீட்டு சின்னமும் இடம் பெறும். அதேநேரத்தில், ஏற்கனவே அச்சிடப்பட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள, 50 ரூபாய் நோட்டுகள் செல்லும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|