பதிவு செய்த நாள்
29 அக்2012
15:10
புதுடில்லி : மானியங்களை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற கேல்கர் கமிட்டியின் அறிக்கையின் மீது மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : நாட்டின் பொருளாதாரம் சவாலான சூழ்நிலையை எட்டி உள்ளது; சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார சூழ்நிலையால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது; அரசின் கடினமான முடிவுகளின் அவசியத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்; நாட்டின் நிதி பற்றாக்குளை 6 சதவீதமாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; நிதி பற்றாக்குறையால் ஏற்படும் சுமைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; மக்களுக்கு தரப்பட வேண்டிய மானியங்கள் ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும்; அரசின் நிதி நிலையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|