ஐ.பி.எல்.,க்கான டைட்டில் உரிமையை வாங்கியது பெப்சி!ஐ.பி.எல்.,க்கான டைட்டில் உரிமையை வாங்கியது பெப்சி! ... ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ...
"2ஜி' ஏலம் நிர்ணய தொகை மிக அதிகம்: மான்டேக் சிங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2012
23:56

புதுடில்லி:"2ஜி' அலைகற்றை ஏலத்தில், மத்திய அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணம் மிகவும் அதிகம் என, மத்திய திட்டக் குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 122 தொலை தொடர்பு வட்டங்களுக்கு, "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. இதற்கான அடிப்படை கட்டணம், 14 ஆயிரம் கோடி ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.
இத்தொகை, கடந்த 2008ம் ஆண்டு, இதே வட்டங்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட ஏழு மடங்கு அதிகமாகும். இதனால், டில்லி, மும்பை உள்ளிட்ட நான்கு தொலை தொடர்பு மண்டலங்களில், அரசு நிர்ணயித்த தொகைக்கு கூட, ஏலம் எடுக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. ஏலத்தில், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், 9 ஆயிரம் கோடி ரூபா‌யே திரட்ட முடிந்தது.
ஏலம் தோல்வி அடைந்தது குறித்து, கருத்து தெரிவித்த மான்டேக் சிங் அலுவாலியா, "அதிகாரமிக்க மத்திய அமைச் சரவை குழு, ஏலத்திற்கு நிர்ணயித்த அடிப்படை தொகை மிகவும் அதிகம்' என்றார்.மறு ஏலத்தில், டில்லி, மும்பை, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநில தொலை தொடர்பு வட்டங்களுக்கு, குறைந்த தொகையை நிர்ண யிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஏலம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க வேண்டும் என்பதில்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதனால், மத்திய அமைச்சர் கபில் சிபல் ஏலத்திற்கு மாற்று வழியை தெரிவித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என, மான்டேக் சிங் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)