பதிவு செய்த நாள்
21 நவ2012
23:56
புதுடில்லி:"2ஜி' அலைகற்றை ஏலத்தில், மத்திய அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணம் மிகவும் அதிகம் என, மத்திய திட்டக் குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 122 தொலை தொடர்பு வட்டங்களுக்கு, "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. இதற்கான அடிப்படை கட்டணம், 14 ஆயிரம் கோடி ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.
இத்தொகை, கடந்த 2008ம் ஆண்டு, இதே வட்டங்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட ஏழு மடங்கு அதிகமாகும். இதனால், டில்லி, மும்பை உள்ளிட்ட நான்கு தொலை தொடர்பு மண்டலங்களில், அரசு நிர்ணயித்த தொகைக்கு கூட, ஏலம் எடுக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. ஏலத்தில், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், 9 ஆயிரம் கோடி ரூபாயே திரட்ட முடிந்தது.
ஏலம் தோல்வி அடைந்தது குறித்து, கருத்து தெரிவித்த மான்டேக் சிங் அலுவாலியா, "அதிகாரமிக்க மத்திய அமைச் சரவை குழு, ஏலத்திற்கு நிர்ணயித்த அடிப்படை தொகை மிகவும் அதிகம்' என்றார்.மறு ஏலத்தில், டில்லி, மும்பை, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநில தொலை தொடர்பு வட்டங்களுக்கு, குறைந்த தொகையை நிர்ண யிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஏலம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க வேண்டும் என்பதில்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதனால், மத்திய அமைச்சர் கபில் சிபல் ஏலத்திற்கு மாற்று வழியை தெரிவித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என, மான்டேக் சிங் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|